• Apr 24 2024

ஆட்டத்தை ஆரம்பித்த ராதிகா... பசியில் தவியாய் தவிக்கும் கோபி- இன்றைய எபிசோடு அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பாக்கியலட்சுமி தொடர்.பரபரப்புக்கு பங்சம் இல்லாதவாறு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்....

ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அப்போது வரும் வர்ஷினி சதீஷை வெளியே அனுப்பிவிட்டு எழிலை காதலிப்பதாக சொல்ல அதிர்ச்சியாகும் எழில் நான் அமிர்தாவை காதலிக்கிறேன் என கூறுகிறார். ஆனாலும் வர்ஷினி அவங்க கல்யாணம் ஆகி அவருடைய கணவர் இறந்துட்டாங்க, அவங்கள விடுங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க என்ன சொல்றீங்க என கேட்க எழில் சாரிங்க என சொல்லி விடுகிறார். இதனால் வர்ஷினி கோபமாக எழுந்து  வெளியே சென்று விடுகிறார்.



அடுத்து வீட்டுக்கு வரும் கோபியை ராதிகா கண்டுகொள்ளாமல் போனில் பேச ஒரு காபி குடிச்சா நல்லா இருக்குமென நினைக்கும் கோபி ராதிகாவிடம் காபி கேட்க நினைக்க கடைசி வரை அவரால் கேட்க முடியாமல் போகிறது. எனினும் அடுத்து போன் பேசி முடித்து விட்டு வரும் ராதிகாவிடம் காபி குடிச்சா நல்லா இருக்கும்னு தோணுது என கூற  எனக்கும் அப்படித்தான் தோணுது ஆர்டர் பண்ணி இருக்கலாம் இல்ல என கூறுகிறார்.

பின்னர்  மயூ வந்து எனக்கு ஒரு சம்ல சந்தேகம் இருக்கு என சொல்ல அம்மா பிஸியா இருக்கேன் கோபி அங்கள் கிட்ட கேளு என்ன கூறுகிறார். பின்னர் கோபி பசியோடு மயூவுக்கு சொல்லிக் கொடுக்கிறார். கொஞ்ச நேரத்தில் மையு லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு என சொல்ல எனக்கும் பசிக்குது என கோபி சொல்கிறார்.

அப்படியே இந்த பக்கம் பாக்கியா கல்யாணம் ஆர்டர் கிடைத்ததற்காக வீட்டில் எல்லோருக்கும் சிக்கன் பிரியாணி சிக்கன் 65 என விதவிதமாக சமைத்து அனைவரும் சந்தோஷமாக சாப்பிடுகின்றனர். பின்னர்  வேலையை முடித்துவிட்டு வரும் ராதிகாவிடம் இருவரும் பசிக்குது என கூற  ஏன் வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க ஏதாச்சு ஆர்டர் பண்ணி இருக்கலாமே என கூற கோபி ஏதாவது ஸ்பெஷலா பண்ணி இருப்பேன்னு நினைச்சேன் என சொல்கிறார்.



அப்படியா ஒரு 10 மினிட்ஸ் என கிச்சனுக்கு போகும் ராதிகா எதையோ சமைக்க தொடங்க பாக்யா வீட்டிலிருந்து பிரியாணி வாசனை வர கோபி இங்கிருந்துதான் வருகிறது. உங்க அம்மா நமக்காக பிரியாணி செய்கிறார், இன்னைக்கு ஒரு கட்டு கட்டிடலாம் என கோபி மயூவிடம் சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்க பின்னர்  ராதிகா சாப்பிட கூப்பிட இருவரும் பிரியாணி என்ற ஆவலோடு சாப்பிட செல்கின்றனர்.



சாப்பிட போன இடத்தில் ராதிகா எதையோ பவுலில் போட்டு கொடுக்க அதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். சாப்பிட மனமில்லாமல் சாப்பிடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement