• Apr 18 2024

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா-கோபியின் திருமணம் முடிந்து விட்டது- வெளியான புகைப்படம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பெங்காலி சீரியலின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர்  தான் பாக்கியலட்சுமி. சுசித்ரா, சதீஷ், ரேஷ்மா என பலர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த தொடர் ஆரம்பத்தில் சாதாரண வரவேற்பை பெற்றாலும் இப்போது  ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியலாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.

இத் தொடரில் பாக்கியா கணவனை பற்றி தெரிந்துகொண்டு  எல்லாத்தையும் உதறித்தள்ளிவிட்டு தனது குடும்பத்திற்காக இப்போது தனது வழியில் பயணித்து வருகிறார்.

இவ்வாறு ஒரு புறம் இருக்க கோபி அவர் விரும்பியது போல் ராதிகாவை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமணம் நடக்குமா, என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் உள்ளது.

கோபியின் அப்பா நான் உயிருடன் இருக்கும் வரை திருமணம் நடக்காது என ஒருபக்கம் அவர் மண்டபத்தை தேட ,4கோபி கண்டிப்பாக  ராதிகாவை மணந்தே தீருவேன் என உறுதியாக இருக்கிறார்.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராதிகாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது  போல தெரிகிறது. இதோ அந்த புகைப்படங்கள்...




Advertisement

Advertisement

Advertisement