நேற்று பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் மிகவும் சிறப்பாக தீபாவளியை கொண்டாடிய நிலையில், இன்று பிக்பாஸ் புதிய டாஸ்க் மூலம் மீண்டும் சிறப்பாக சில பிரச்சனைகளுக்கு அடி போட்டுள்ளார். நீயும் பொம்மை, நானும் பொம்மை என்னும் டாஸ்க் நடத்தப்படுகிறது.
மொத்தம் 19 போட்டியாளர்களுக்கு நடக்கும் இந்த போட்டியில் 18 டால் ஹவுஸ் மட்டுமே இருக்கும், எந்த போட்டியாளர் பெயர் பொருத்தப்பட்ட பொம்மை கடைசியாக வைக்கப்படுகிறதோ அவர் அந்த போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.
அதன் படி ஹவுஸ்மேட் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக அவரின் பெயர் போட்ட பொம்மையை உள்ளே வைக்க வேண்டும் என கூறுகிறார். இதனால் போட்டியாளர்களுக்கு இடையில் அதிக மோதல் ஏற்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தற்பொழுது அஸீம் குயின்சியிடம் நேீங்க பேவரிசம் பார்க்கிறீங்க என்று கூறினார். அதனைத் தொடர்ந்து அமுதவானனும் நிவாஷினியும் அசலும் தப்பு பண்ணினால் கண்டு கொள்ளாமல் சிரித்து விட்டு போறீங்க. ஆனால் மற்றவங்க ஏதாவது பண்ணினால் குறை சொல்லுறீங்க என்று கூறியுள்ளார். இவ்வாறு அமுதவாணன் முதல் முதலாக தனது கருத்தை முன்வைத்ததால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!