• Apr 20 2024

"வீட்டை விட்டு வெளிய போடா".. வெற்றியைத் துரத்திய அபி.. கதறி அழும் சுடர்.. கண் கலங்க வைத்த 'தென்றல் வந்து என்னைத் தொடும்' ப்ரோமோ வீடியோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'தென்றல் வந்து என்னை தொடும்' சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொடரில் கதாநாயகனாக வெற்றியும், கதாநாயகியாக அபியும் காணப்படுகின்றனர். 

அந்தவகையில் தற்போது இந்த சீரியலின் கதைப்படி வெற்றி மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார். அதே நேரத்தில் அவரது மனைவி அபி கலெக்டராக இருக்கிறார். இந்தத் தம்பதியினருக்கு சுடர் என்கிற குழந்தை பிறக்கிறது. சுடர் தற்போது வளர்ந்து பள்ளிக்கு செல்லும் வயதை அடைந்திருக்கின்றார். ஆனால் எதிர்பாராத விதமாக சுடரும் வெற்றியும் நல்ல நண்பர்களாக ஆகிப் போகின்றனர்.


இந்நிலையில் இந்த சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அபி வெற்றியை வீட்டில் இருந்து விரட்டி அடித்து விடுகிறார். இதனால் சுடர் வெளியே போகாதே சிம்பா என்று சொல்லி அழுது கொண்டிருக்கிறார். அனைவரையும் கண் கலங்க வைக்கும் அந்த நெகழ்ச்சியான ப்ரோமோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. 

அதாவது சுடருக்கு தன்னுடைய தந்தை தான் வெற்றி என்பது தெரியாது. அதேபோல் வெற்றிக்கும் சுடர் தான் பெற்ற மகள் என்பது இதுவரை தெரியாது. இருப்பினும் இவர்கள் இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கின்றனர். ஒரு கட்டத்தில் சுடருக்கு கலெக்டராக இருக்கும் அபியின் எதிரிகளால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படுகிறது. அந்தவகையில் சுடர் சென்ற கார் பயங்கர விபத்துக்குள்ளாகிறது. 


இதனைத் தொடர்ந்து அவருக்கு பாடிகார்டாக வெற்றியை நியமனம் செய்ய போலீசார் விழைகின்றனர். அதேபோல் வெற்றியும் சுடருக்கு பாதுகாவலராக சுடர் வீட்டிலேயே தங்கி இருக்கிறார். ஆனால் வெற்றி ஒரு ரவுடி என்பது மட்டும்தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் கொலை செய்திருக்கிறார் என்று சொல்லி பத்திரிகைகளில் அடிக்கடி செய்தி வருகிறது.

இந்நிலையில் ஒரு கொலையாளியை கலெக்டர் அபி தனது வீட்டில் வைத்து பாடி கார்டாக வைத்து வருகிறார் என்ற செய்தி ஊர் முழுக்க தீ போன்று பரவத் தொடங்குகிறது. இந்த செய்தியை அபியும் படிக்கிறார். இதனால் கோபமான அபி வெற்றியிடம் தாறுமாறாக கத்துகிறார். இதன் பின்னர் வெற்றியின் நண்பராக இருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக வெற்றியை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார்.


மேலும் நீ ரவுடி என்று தான் நினைத்தேன். ஆனால் நீ இப்படி கொலையாளியாக இருப்பாய் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை இப்போதே வீட்டை விட்டு வெளியே செல் என்று கோபத்தில் கத்துகிறார். இதைக் கேட்ட சுடர் பாப்பா "நீ கொலையெல்லாம் செய்திருக்கிறாயா சிம்பா" என்று சொல்லி கேட்டு கேட்டு அழுகிறார். அதுமட்டுமல்லாது வீட்டை விட்டு வெளியே போகாதே என்று சொல்லி சொல்லி கதறி அழுது கொண்டிருக்கிறார். 

இருப்பினும் வெற்றி தற்போது அபியிடம் இருந்து பிரிந்து அந்த வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement