• Mar 29 2024

சேலையில் செதுக்கிய சிலை போல் இருக்கும் பிரியங்கா... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக வளர்ந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் தெலுங்கில் வெளியான 'கேங் லீடர்' என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்திருக்கின்றார்.


அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய 'டாக்டர்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்திருக்கின்றார்.


அத்தோடு சூர்யாவுடன் இணைந்து 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.


அதன் பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன் 'டான்' என்ற திரைப்படத்திலும் நடித்தார்.


இவ்வாறாக பல படங்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்த நடிகைகளில் தற்போது பிரியங்காவும் இடம்பிடித்துள்ளார்.


இவர் படங்களில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் அடிக்கடி குடும்ப குத்து விளக்கு போன்று உடையணிந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். 


அந்தவகையில் தற்போதும் சேலை அணிந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கின்றார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் "சேலையில் செதுக்கிய சிலை போலவே இருக்கின்றார்" எனக் கூறி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement

Advertisement