• Apr 20 2024

முதல் முறையாக மகள் மால்தியின் முகம் தெரிய புகைப்படம் வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா- குவியும் லைக்குகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் தமிழன்.இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ப்ரியங்கா சோப்ரா. இப்படத்தைத் தொடர்ந்து பாலிவூட் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

 பாலிவூட்டில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸியானவராக வலம் வந்த இவர் தன்னை விட  10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.


அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆன்லைன் மூலம் டிரெணடிங்கில் இருந்து வரும் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா முக்கியமானவர். பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மட்டும் 83 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.


இவர் இந்த வருட ஆரம்பத்தில் வாடகைத்தாய் ஓர் குழந்தையையும் பெற்றெடுத்தார். இந்த குழந்தைக்கு மால்தி என பெயரிட்டனர். குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதாவது பிரியங்கா சோப்ரா பதிவிடுவார். 

தற்போது அமெரிக்காவில் இருக்கும் பிரியங்கா சோப்ரா தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மகள் மால்தியின் கண்கள் மூடப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement