• Apr 25 2024

குழந்தை மற்றும் தோழியுடன் இணைந்து புகைப்படம் எடுத்த பிரியங்கா சோப்ரா…என்ன ஒரு அழகு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் அழகினாலும் சிறந்த நடிப்பினாலும் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் உலகில் அதிகம் அறியப்பட்ட பெண்களில் ஒருவராக மட்டுமல்லாது, உலகில் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராகவும் இருந்து வருகின்றார். இவர் சிறு வயது முதலே திறமையான ஒருவராக விளங்கி வந்திருக்கின்றார். அதாவது பிரியங்கா சோப்ரா 2000-ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டமான 'மிஸ் வோர்ல்டு' பட்டத்தை வென்றபோது அவருக்கு வயது 18 ஆகும்.

அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2002 இல் ஒரு இந்தி திரைப்படம் மூலம் அவர் திரையுலகுக்கு அறிமுகமாக வேண்டியிருந்தது. ஆனாலும் பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் அந்த இந்திப்படத்தில் நடிக்காததால் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த தமிழ்த் திரைப்படமான 'தமிழன்' அவருக்கு முதல் படமானது.

அதுமட்டுமல்லாது நடிகர் ரன்பூர் கபூருடன் இணைந்து 'பர்ஃபி', ரன்வீர் சிங்குடன் இணைந்து 'பாஜிராவ் மஸ்தானி', 'தி ஸ்கை இஸ் பிங்க்' போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அத்தோடு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட 'மேரி கோம்' திரைப்படத்தில் நடித்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களினையும் பெற்றார்.

இவர் நடிகையாக மட்டுமல்லாது சிறந்த சமூக நலவாதியாகவும் இருந்து வருகின்றார். குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப்க்கு இந்தியாவுக்கான நல்லெண்ணத் தூதுவராக 2010-ஆம் ஆண்டும், உலகுக்கான நல்லெண்ணத் தூதுவராக 2016-ஆம் ஆண்டும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக பல படங்களில் நடித்து மேற்கத்திய ரசிகர்கள் பலரின் உள்ளங்களை அள்ளிய பிரியங்கா சோப்ரா ஹிந்தியின் பாப் பாடகர் நிக் ஜோனசை 2018 இல் மணந்தார். இவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலமாக பெண் குழந்தை ஒன்றினையும் பெற்றெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அக்குழந்தையுடனும் தனது தோழியுடனும் எடுத்த புகைப்படம் ஒன்றினை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார் நடிகை பிரியங்கா. அப்புகைப்படமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement