• Apr 19 2024

தம்பியின் மகளை கையில் ஏந்திய படி தீபாவளியைக் கொண்டாடிய ப்ரியங்கா- வைரலாகும் கியூட்டான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தவிர்க்க முடியாத தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் ப்ரியங்கா தேஷ்பாண்டே. தனது கம்பீரமான குரலினாலும் நக்கல் கலந்த பேச்சினாலும் தனக்கென ஊர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் இவர் தற்பொழுது ஊ சொல்லுறியா ஊ ஊ சொல்லுறியா என்னும் நிகழ்ச்வியைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இது தவிர ஸ்ராட் மியூசிக், சூப்பர் சங்கர் போன்ற இன்னும் பல நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கியவர் என்பதும் முக்கியமாகும். அத்தோடு கடந்த ஆண்டு முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 5 இலும் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் இவர் தனக்கென ஓர் யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றார்.இந்த நிலையில் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.அந்த வகையில் ப்ரியங்காவும் தற்பொழுது தனது தம்பியின் குழந்தையை ஏந்திய படி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். 


இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.அத்தோடு இவரைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாராவின் பாணியில் வீடியோ வெளியிட்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement