• Apr 25 2024

சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டாரா பிரியா பவானி சங்கர் ..திடீரென மேயாத மான் இயக்குநர் போட்ட ட்வீட்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 காதலனோடு புதிய வீட்டில் குடியேற போவதாக நடிகை பிரியா பவானி சங்கர் அறிவித்த நிலையில், அவர் சினிமாவில் இனிமேல் நடிக்கப் போவதில்லை என இயக்குநர் ரத்னகுமார் போட்டுள்ள ட்வீட் பலரையும் ஷாக்கில் ஆழ்த்தி உள்ளது.செய்திவாசிப்பாளராக இருந்து, சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் ரத்னகுமார் இயக்குநராக அறிமுகமான மேயாத மான்படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே பிரியா பவானி சங்கர் நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட நல்ல படங்களில் நடித்து வருகின்றார்.அத்தோடு கடந்த 2017ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ், இந்துஜா ரவிச்சந்திரன், விவேக் பிரசன்னா நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் திரையுலகில்  அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். புதிய தலைமுறை செய்தியாளராக இருந்த பிரியா பவானி சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமான நிலையில், அங்கிருந்து சினிமாவில் அதிரடி என்ட்ரி கொடுத்தார்.


மேலும் கவர்ச்சி குயினாக எல்லாம் சினிமாவில் நடிக்காமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம் மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே நடிகை பிரியா பவானி சங்கர் தனது நண்பர் ராஜவேல் என்பவரை காதலித்து வந்தார். இவ்வாறுஇருக்கையில், 18 ஆண்டுகளாக கடற்கரை பகுதியில் வீடு கட்டி நிலவை ரசிக்க வேண்டுமென்கிற தங்களது கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக அவர் புதுமனை புகுவிழா நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார்.ஜோடியாக இருவரும் புது வீட்டில் குடியேறுவதை பார்த்த மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இருவருக்கும் ஹாப்பி மேரிட் லைஃப் என திருமண நாள் வாழ்த்துக்களை போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஷாக் ஆக்கி விட்டார். அத்தோடு, அவர் பதிவிட்ட ட்வீட் இன்னொரு பெரிய புயலையும் சினிமா துறையில் கிளப்பி உள்ளது.


மேலும் சும்மா கிளப்பிவிடுவோம் என போட்டு நடிகை பிரியா சினிமாவுக்கு முழுக்கு என போட்டு ஹாப்பி மேரிட் லைஃப் என்றும் பதிவிட்டு தனது காமெடி சென்ஸை காட்டியிருக்கிறார் ஆடை, குலு குலு படங்களின் இயக்குநர் ரத்னகுமார். பிரியா பவானி சங்கரை அறிமுகப்படுத்தியவரே இப்படி சொல்றாரே ஒருவேளை இருக்குமோ என நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

உடனடியாக நடிகை பிரியா பவானி சங்கர் அந்த ட்வீட்டுக்கு கீழ், இன்னமும் எங்களுக்கு கல்யாணம் எல்லாம் ஆகல.. இப்போதைக்கு புதுமனை புகுவிழா தான் என்றும் உங்களுடைய வாழ்த்துக்களை எதிர்காலத்துக்கு சேமித்து வைத்துக் கொள்கிறோம் என பிரியா பவானி சங்கர் ட்வீட் போட்டு விளக்கியுள்ளார்.



நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் சிம்புவின் பத்து தல, எஸ்ஜே சூர்யாவின் பொம்மை, ஜெயம் ரவியின் அகிலன், ராகவா லாரன்ஸின் ருத்ரன், டிமான்டி காலனி 2 மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் உள்ளன. எனினும் இப்போதைக்கு பிரியா பவானி சங்கர் சினிமாவுக்கு முழுக்கு போடும் வாய்ப்பே இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Advertisement

Advertisement

Advertisement