• Apr 20 2024

திருமணம் முடிந்த சில மாதத்தில் கர்ப்பம் – நடிகை பூர்ணாவின் வளைகாப்பு புகைப்படங்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்தியா சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். இவரை பலரும் குட்டி அசின் என்று தான் அழைத்தனர். இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன் இவர் மலையாளத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் நிறைய பட வந்து இருந்தது. அதற்கு பிறகு இவர் தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். சிறிது காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் பூர்ணா தவித்து கொண்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை.

இடையில் இவர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இருந்தார். இதை தொடர்ந்து மீண்டும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். 

அந்த வகையில் சமீபத்தில் பூர்ணா நடிப்பில் வெளியாகியிருந்த விசித்திரன் படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.இப்படத்தினை இயக்குநர் பத்மகுமார் தான் தமிழில் இயக்கி இருந்தார். மேலும் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்து இருந்த நெஞ்சுக்கு நீதி படத்தில் பூர்ணா நடித்திருந்தார்.


 இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடிகை பூர்னாவிற்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் Shanid Asif Ali என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் தனக்கும் Shanid Asif Aliகும் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் பூர்ணா. இப்படி ஒரு நிலையில் தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாக பூர்ணா அறிவித்து இருந்தார். இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், “ இந்த வீடியோ எனக்கு மிகவும் ஸ்பெஷலான வீடியோ. நான் தாயாக மாற போகிறேன். என்னுடைய அப்பா, அம்மா இருவரும் மீண்டும் தாத்தா பாட்டி ஆக போகிறார்கள் என்று மகழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.

 இதை தொடர்ந்து பூர்ணாவிற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தனர். தற்போது தனது முதல் குழந்தையை நோக்கி காத்துகொண்டு இருக்கும் பூர்ணாவிற்கு சமீபத்தில் தடபுடலாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.  இது தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement