• Mar 28 2024

திருமண செய்தியை கேட்டாலே தலை தெறிக்க ஓடும் பிரபாஸ்- இப்படி பண்ணிட்டாரே- கடும் குழப்பத்தில் இருக்கும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் பிரபாஸ். இவரது நடிப்பில் இறுதியாக ஆதிபுரூஸ் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை அடுத்து தன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவருக்கு 43 வயது ஆகின்றது ஆனால் இன்னும் திருமணம் நடக்கவில்லை. இதனால் இவர் விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் Unstoppable with NBK 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரபாஸ். 


அப்பொழுது அவரிடம் காதல், திருமணம் பற்றி கேள்வி கேட்டார் பாலகிருஷ்ணா.அதற்கு பிரபாஸ் கூறியதாவது, சல்மான் கானுக்கு பிறகு தான் எனக்கு திருமணம் நடக்கும் என்றார். பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு 56 வயதாகிறது. அவர் இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில்லை இல்லை. ஆனால் அவர் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக உள்ளது.

சல்மான் கானுக்கு கல்யாணமே நடக்காது போன்று. அப்படி என்றால் பிரபாஸுக்கும் கல்யாணமே நடக்காதா என ரசிகர்கள் புலம்புகிறார்கள். பிரபாஸின் திருமணம் பற்றி பேசிய ஒரே ஆள் அவரின் பெரியப்பா தான். ஆனால் அவரும் அண்மையில் இறந்துவிட்டாரே. இனி யார் பிரபாஸுக்கு திருமணம் செய்து வைப்பார் என ரசிகர்கள் கவலையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


முன்னதாக அனுஷ்கா ஷெட்டியும், பிரபாஸும் காதலிப்பதாக பேசப்பட்டது. பாகுபலி படத்தில் நடித்தபோது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அனுஷ்கா தன் காதலி இல்லை குடும்ப நண்பர் மட்டுமே என்று மீண்டும் மீண்டும் கூறினார் பிரபாஸ்.

 இருந்தாலும் பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் தான் திருமணம் நடக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். முன்னதாக ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தபோது சுமார் 6 ஆயிரம் பெண்கள் பிரபாஸுக்கு ப்ரொபோஸ் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement