• Apr 23 2024

கணவர் இறந்த 2 நாட்களில் வேலைக்கு திரும்பிய பிரபல டிவி நடிகை- என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் கெட்கி தாவே. அவரின் கணவரான நடிகர் ராசிக் தாவே சுமார் இரண்டு ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 65 வயதான அவர் ஜூலை 28ம் தேதி அவர் திடீரென மரணம் அடைந்தார்.

இவ்வாறுஇருக்கையில் கணவர் இறந்த இரண்டு நாட்களில் வேலைக்கு திரும்பிவிட்டார் கெட்கி. குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த மேடை நாடகம் ஒன்றில் நடித்தார்.

நீ எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இரு கெட்கி என ராசிக் உயிருடன் இருந்தபோது கூறியுள்ளார். கணவரின் பேச்சை கேட்டு தான் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

கணவர் பற்றி கெட்கி தெரிவித்திருப்பதாவது….

என் துக்கத்தில் யாரும் பங்கேற்க விரும்பவில்லை. மகிழ்ச்சியில் தான் அனைவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். சூரத்தில் அந்த நாடகம் நடந்தது. நான் அங்கு சென்றேன்.

நான் கதாபாத்திரமாக மாறும்போது கெட்கி தாவேவின் தனிப்பட்ட பிரச்சனை அங்கு வராது. மேலும் உடல்நலம் சரியில்லாதபோது கூட நான் வேலைக்கு சென்றிருக்கிறேன். அந்த நாடகத்திற்கு ஏற்கனவே டிக்கெட் விற்பனை செய்துவிட்டார்கள். என்னால் யாருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாதென்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement