• Apr 19 2024

நடு ரோட்டில் வைத்து பிரபல நடிகை கணவன் முன் சுட்டுக்கொலை... அதிர்ச்சியில் திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவரே நடிகை ரியா குமாரி. இவருக்கு தற்போது 30 வயதாகின்றது. பல படங்களில் நடித்துள்ள இவர் தன்னுடைய நடிப்புத் திறமையின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர். 

இந்நிலையில் நேற்று காலை தனது கணவர் மற்றும் 3 வயது மகளுடன் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து மேற்குவங்கத்திற்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளார். குறிப்பாக மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களின் கார் சென்றுள்ளது.


இவ்வாறாக இவர்களின் கார் மகிஷ்ரேகா பாலம் அருகே சென்ற போது மர்ம நபர்களால் நடிகை ரியா குமாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது கணவர் அளித்த வாக்குமூலத்தின் படி, இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக ரியா குமாரியின் கணவர் பிரகாஷ் குமார் காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். 

அந்த நேரத்தில் துப்பாக்கியுடன் அங்கு வந்த மூன்று இனந்தெரியாத மர்ம நபர்கள், பிரகாஷ் குமாரை தாக்கி அவரிடம் வழிப்பறி செய்ய முயன்றுள்ளனர். இதனை பார்த்த ரியா குமாரி கொள்ளையர்களிடம் இருந்து தனது கணவரை காப்பாற்ற பலவாறாக முயன்றுள்ளார். அப்போது அந்த மூன்று பேரில் ஒரு கொள்ளையன் ரியா குமாரியை சுட்டதாக தெரிவித்துள்ளார். 


மேலும் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்ட அந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு ரத்த வெள்ளத்தில் சரிந்த தனது மனைவியுடன் உதவித் தேடி பிரகாஷ் குமார் காரிலேயே 3 கிலோ மீட்டர் அலைந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து பிர்டால பகுதி மக்கள் இதுதொடர்பாக போலீசாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடிகை ரியா குமாரியை உலுபெரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரியா குமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், நடிகையின் கணவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருவதாகவும், மேலும் ரியா குமாரி சுடப்பட்ட துப்பாக்கி குண்டை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதோடு பிரகாஷ் குமார் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களின் குழந்தையிடம் பேச உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அம்மாநில அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி இதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை பெற்று கொடுப்பார்கள் என தெரவித்துள்ளார். அத்தோடு எல்லா இடங்களிலும் சமூக விரோதிகள் உள்ளனர், ஆனால் தங்களின் அரசு அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement