• Apr 25 2024

பிரபல நடிகை படப்பிடிப்புத் தளத்தில் தூக்கிட்டுத் தற்கொலை... சக நடிகரை உடனடியாகக் கைது செய்த போலீசார்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சீரியல்களின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை துனீஷா. இவர் முதன்முதலில் பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப் என்ற தொடரில் நடிக்க தொடங்கினார். அதுமட்டுமல்லாது 'இஷ்க் சுபான் அல்லா, கப்பார் பூஞ்ச்வாலா, ஷேர்-இ-பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங்' மற்றும் 'சக்ரவர்த்தி அசோகா சாம்ராட்' உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்துள்ளார். 


சீரியல்களில் மட்டுமல்லாது இந்தி திரைப்படங்களான 'பிதூர், பார் பார் தேகோ, கஹானி 2 துர்கா ராணி சிங்' மற்றும் 'தபாங் 3' ஆகியவற்றிலும் நடித்துள்ளார். இவ்வாறாக திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த 20 வயதான இவர் இன்று மராட்டியத்தில் அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அத்தோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.


லை செய்து கொண்ட வழக்கில் வாலிவ் போலீசார், சக நடிகர் ஷீஜன் கான் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி வாலிவ் போலீசார் கூறும்போது "படப்பிடிப்பின்போது, தேநீர் இடைவேளையில் நடிகை துனீஷா கழிவறைக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இந்த தகவல் கிடைத்து நாங்கள் சென்று, கதவை உடைத்து சென்றோம். இதில், துனீஷா தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார்" எனக் கூறியுள்ளனர். 


மேலும் "இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். தற்கொலை குறிப்பு எது, இந்த வழக்கை கொலை மற்றும் தற்கொலை என்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறோம்" என்றும் கூறியுள்ளனர். அத்தோடு படப்பிடிப்பு தளத்தில் துனீஷாவுடன் இருந்தவர்கள், அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளனர். 


இந்நிலையில், தொடரில் நடித்து வரும் சக நடிகரான ஷீஜன் கான் என்பவர் மீது துனீஷாவின் தாயார் புகார் ஒன்றினை அளித்து உள்ளார். இதுபற்றி உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நடிகை துனீஷாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஷீஜன் கானை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை போலீசார் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement