ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டு மதுராந்தகனுக்கு அருள்மொழி வர்மன் முடி சூட்டிய வரலாற்றை வைத்துக் கொண்டு இப்படியொரு வரலாற்று காவியத்தை அமரர் கல்கி உருவாக்கியது தான் பொன்னியின் செல்வன் கதைக்கு கிடைத்த புரமு் வெற்றி என்று கூற வேண்டும்.
இயக்குநர் மணிரத்னம் பல ஆண்டுகளாக இந்த கனவு படத்தை எடுக்க போராடி கடைசியில் இந்த ஆண்டு ரசிகர்களின் பார்வைக்கு பொன்னியின் செல்வன் படத்தை படைத்து விட்டார்.இப் படம் கடந்த 30ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் தயாரித்திருந்த பிரபல இசையமைப்பாளர் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. பல வருடங்களாக திரையரங்கிற்கு வாராதவர்களை கூட இப்படம் அழைத்து வந்துள்ளது.
இவ்வாறுஇருக்கையில் , பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 9 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 158 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
இதன்முலம் தமிழகத்தில் ரூ. 153 கோடி வசூல் செய்திருந்த பாகுபலி படத்தின் சாதனையை தோற்கடித்துள்ளது பொன்னியின் செல்வன்.
Listen News!