மணியின் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 375 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.அதே போல் தமிழகத்தில் ரூ. 158 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களிலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பொன்னியின் செல்வன் கன்னடத்தில் மட்டும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.ஆம், கன்னடத்தில் மட்டுமே ரூ. 15 கோடி வசூல் ஷேர் வரும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ரூ. 10 கோடி வருவதே கஷ்டம் என்று கூறப்படுகிறது.
இதற்க்கு முக்கிய காரணம் கன்னடத்தில் சமீபத்தில் வெளிவந்த Kantara திரைப்படம் தான்.ஆம், ஏனென்றால் அப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இதனால், அப்படத்தை பல்வேறு திரையரங்கில் ஓடவைக்க பெரும்பாலான திரையரங்கங்களில் இருந்து பொன்னியின் செல்வன் படத்தை நீக்கி வருகிறார்களாம்.
இதனால் தான் பொன்னியின் செல்வன் திரைப்படம் கன்னடத்தில் வசூல் குறைந்துள்ளது என்றும் இதன்பின் அரசியல் சதி இருக்கிறது என்றும் பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
Listen News!