நாளுக்கு நாள் பாராட்டுக்களைப் பெற்றாலும் அடிக்கடி விமர்சனங்களையும் குவித்து வரும் திரைப்படம் தான் அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.கடந்த 30 தேதி வெளிவந்த இப்படம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 7 நாட்களில் உலகளவில் ரூ. 340 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது.நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் பொன்னியின் செல்வன் வசூல் கண்டிப்பாக ரூ. 500 கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது.
மேலும் இப்படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பதோடு இதன் இரண்டாம் பாகம் இன்னும் ஆறு மாதங்களில் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!