• Apr 25 2024

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய அப்டேட்- வசூலைக் குவிக்க மணிரத்னம் போட்ட புது பிளான்

stella / 1 year ago

Advertisement

Listen News!


 மன்னன் ராஜ ராஜ சோழனை பற்றி, கல்கி புனையப்பட்ட நாவலாக எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இதற்கு முன்னர் இக்கதையை படமாக்க எம்ஜிஆர், கமலஹாசன், போன்ற பல ஜாம்பவான்கள் முயற்சி செய்த போதும்.. முடியாமல் போன நிலையில், இதனை சாத்தியமாக்கி காட்டியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். 

இப்படத்தில் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி,  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் 500 கோடிக்கு மேல் கல்லா கட்டியது. இரு பாகத்தையும் 500 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்த லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திற்கு இப்படம் முதல் பாகத்திலேயே போட்ட தொகையை பெற்றுக் கொடுத்தது.


இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ரிலீஸ் தேதியில் சில மாற்றங்கள் ஏற்பட்டதாக வதந்திகள் பரவியது. மேலும் இப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளை துவங்கி உள்ளது லைகா நிறுவனம். 


அதே போல ஏப்ரல் மாதம் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக இப்படத்தில் நடித்தவர்களிடம் இருந்து நாட்களையும் எடுத்துக் கொண்டாராம். இதனால் ஏப்ரல் மாதத்திலிருந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொள்வார் என்று நம்பப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement