• Apr 23 2024

தனுஷின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த பார்த்திபன்- அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் தான் பார்த்திபன். இவரது இயக்கத்தில் இறுதியாக இரவின் நிழல் திரைப்படம் வெளியாகியது.ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது.

இந்நிலையில் பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதுகளை குவித்த ஆடுகளம் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததாகவும் அதை பார்த்திபன் மறுத்தாகவும் பதிவிட்டுள்ளார். அதில், Beginning of this day "hi" ! Beginning' ஜகன் விஜயா படை-படைப்பாக்கத்தில் நண்பர் லிங்குசாமியின் தம்பிசாமி போஸ் வெளியிடும் split frame-ல் இரு காட்சிகளை காட்டி, இருக்கையில் இருப்புக் கொள்ளா தவிப்பை உண்டாக்கி, முடிவில் இரு கை ஓசையெழுப்பச் செய்கிறார். சினிமா விரும்பிகள் ஒவ்வொருவரும் இரு டிக்கட் வாங்கிப் பார்க்கலாம். இயக்குநருக்கு நிறைய வாய்ப்புகள் வரும். அடுத்ததில் இன்னும் நேர்த்தி கூட்டுவார்!


ஒரு flash back ஆடுகளம்' படத்தில் நடிக்க திரு.வெற்றிமாறன் வந்து அழைப்பு விடுக்க நான் மறுப்பை விடுக்க காரணம்… நான் திரு.தனுஷிடம் beginning தினுசான கதை ஒன்றை கூறியிருந்தேன் இருவரும் இணைந்து நடிக்க! ஒரு frame-ல் இரு கதைகள் complicated ஆக இருக்குமென்று  முழுங்கி பின் ஓங்கி முழங்கி சொல்லப்பட்டது. ஆகா!!!!! "ஆகா miss பண்ணிட்டமே" எனத் தோன்றினாலும் இன்றைய இளம் இயக்குநர்கள் புதிய புதிய யுத்திகளுடன் வருவதால் நாமும் புத்தியை இன்னும் கூர்மை கத்தியாக்கி கோதாவில் இறங்க உத்வேகம் வருகிறது.


From the Beginning தின்றதை மறந்து பசி எடுப்பதைப் போல, வென்றதை மறந்து மேலும் வெல்ல முயல்வோம். இன்றிரவு 'செம்பி' பார்த்து மீண்டும் எழுதுகிறேன். விமர்சனமாக அல்ல- வருமானத்திற்காக… நாளைய சினிமாவில் வருமானம் ஈட்ட வெறும் கதைவிட முடியாது. சொல்லும் முறைகள் மூலமே இளம் பார்வையாளர்களை வெல்ல முடியும்! வயது & அனுபவம் பழையது. பழையன மறந்து பயில்வோம் சுடச்சுட !. என்று பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement