• Apr 19 2024

விஜய்சேதுபதியை சந்தித்து கவிதை மழை பொழிந்த பார்த்திபன்- ஓ இது தான் விஷயமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து கதாநாயகனாக வளர்ந்து நிற்பவர் தான் விஜய் சேதுபதி.

இதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார்.இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்பொழுது கேமியோ மற்றும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இந்நிலையில் விஜய் சேதுபதியை, இயக்குநர் நடிகர் பார்த்திபன் சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த புகைப்படத்தில் மெர்ரி கிறிஸ்துமஸ் பட லுக்கில் விஜய் சேதுபதி காட்சியளிக்கிறார்.இந்த சந்திப்பு குறித்து, தனது முகநூல் பக்கத்தில், பார்த்திபன் குறிப்பிட்டதாவது "


இன்று மாலை …ஆண்களில் ஷாரூக்கான் பெண்களில் Katrina Kaif இருவரையும் பிரமிக்க செய்து கொண்டிருக்கும் power-ஐ சந்தித்தேன்.நேசிக்கும் கிளியும்,வாசிக்கும் பியானாவும்,யோசிக்கும் புதிய மார்க்கமாய் கண்டு ரசித்தேன் ரம்யமாய்!

கமல் சார் செங்கடல் என்றால் இவர் கருங்கடல்.கடலாய் இருவருக்குமே அறிவின் அலை கரை நீள்கிறது.பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். நேசிக்கக் விரும்புகவர்களை நெருங்கக் கூடாதென்பார்கள்.நெருங்கியப் பின்னும் அதிநேசம் கொள்பவராய் இருந்தார்.தித்திப்பின் சுவை நாவினில்.சந்திப்பின் தித்திப்பு அதை அசை போடுகையில்…" என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement