• Mar 29 2024

குழந்தை பிறந்த பின் பாண்டவர் இல்லம் அனு போட்ட முதல் பதிவு- கண்கலங்க வைக்கும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான்  பாண்டவர் இல்லம். ஐந்து மருமகள்களின் கதையையும், ஐந்து அண்ணன் தம்பிகளின் கதையையும் இந்த நாடகம் காட்டி வருகிறது. இதில் பாண்டவர் குடும்பத்திற்கும் ஜமீன் குடும்பத்திற்கும் இடையே இருக்கும் பகையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. 

 இந்த தொடரில் ரோஷினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை அனு. இவர் ஆரம்பத்தில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்கிற நாடகத்தின் மூலமாக அறிமுகமானார்.முதல் சீரியலிலேயே நெகட்டிவ் கதாபாத்திரமாக வில்லியாக நடித்தார். சிறந்த வில்லத்தனங்களை வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்த தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 


அடுத்த தொடரில் சன் டிவிக்கு தாவிய அவர் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்தார். ஆரம்பத்தில் வில்லியாக நடித்தார். பின்னர் மனம் திருந்தி பாசிட்டிவ் ரோலாக மாறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருந்தது. இதனால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியது. இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சமீபத்தில் பாண்டவர்களிடம் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் அனு. 

இவருக்கும் விக்னேஷ் என்பவருக்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆறு வருடங்கள் கழித்து கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் வளைகாப்பு புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார். அனுவும் அந்தரத்தில் தொட்டிலில் அமர்ந்து கொண்டு இவர் வளைகாப்பு ஷூட்டிங் எடுத்திருந்தார். எந்த ஆடம்பரமும் இல்லாமல் வீட்டிலேயே வைத்து இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது.


இந்த நிலையில் இன்று அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பிரசவ அறையில் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் அவருக்கு ஜூஸ் அருந்த கொடுத்தும், முதுகை தட்டிக் கொடுத்தும் அனுவை தாயாக இருந்து பார்த்துக் கொள்கிறார். மேலும் குழந்தை பிறந்தவுடன் அதை கையில் வாங்கிய பின்பு இருவரும் கண்கலங்கி இருக்கின்றனர். அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement