• Apr 20 2024

ராதிகாவுக்கு செருப்பால் அடித்த மாதிரி பதிலடி கொடுத்த பாக்கியா- பழனி செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த கோபி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்று என்ன நடக்கவுள்ளது என்ற பார்ப்போம். பாக்கியா கான்டீன் திறப்பு விழாவில் எல்லோரும் மங்கள விளங்கேற்றி மகிழ்ச்சியாக திறப்பு விழாவைக் கொண்டாடுகின்றனர். இது ஒரு புறம் இருக்க கோபி தனது நண்பனிடம் இனியா திறப்பு விழாவுக்கு போனது பற்றி புலம்புகின்றார்.

அத்தோடு இனியா தன்னை விட்டு போய் விடுவாளோ என்று பயமாக இருக்கு. இனியா இல்லாமல் என்னால இருக்க முடியாது என்று கூறுகின்றார். அவரைப் போல பாக்கியா பக்கம் முழுக்குடும்பம் இருப்பதைப் பார்த்த ராதிகா கோபி அவங்க கூட இல்லை, ஆனால் இவரோட குடும்பம் மட்டும் எதனால இவ கூட இருக்கணும் என்று புலம்புகின்றார்.


தொடர்ந்து எல்லோரும் சாப்பிடும் போது ராதிகா சாப்பிடாமல் கிளம்ப பாக்கியா சென்று நன்றி சொல்வதோடு உங்களால தான் கேன்டீன் ஆரம்பிச்சேன் என்று சொல்லி சாப்பிட அழைக்க முதலில் மறுப்புத் தெரிவித்த ராதிகா பின்பு வந்து சாப்பிடுகின்றார். தொடர்ந்து பாக்கியா எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறிவிட்டு ராதிகாவிடம் இங்கிலிஸ்ல பேசணும் சொல்லித்தாங்க என்று கேட்கிறார்.

இதனால் ஜெனியும் சொல்லிக் கொடுக்க பாக்கியா அதே மாதிரி சொல்லி ராதிகாவை வெறுப்பேற்றுகின்றார். இது ஒரு புறம் இருக்க கோபி போன் பண்ணி இனியாவை அழைத்து வரவா என்று கேட்க இனிய நிகழ்ச்சி முடிந்ததும் வாரேன் என்று சொன்னதால் கோபி இனியாவை அழைத்துச் செல்ல  கிளம்பி நிகழ்ச்சிக்கு வருகின்றார்.


பாக்கியா ராதிகாவுக்கு முகத்தடி கொடுத்ததை தாங்க முடியாமல் ராதிகா பாக்கியா கொடுத்த பூவை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு செல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது. தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்த பழனி பாக்கியாவிடம்  நீங்க லட்சனமா இருக்கிறீங்க உங்களுக்கு 30 வயசு இருக்குமா என்று கேட்க அங்கு வரும் கோபி அதிர்ச்சியடைகின்றார்.


Advertisement

Advertisement

Advertisement