• Apr 19 2024

ஈஸ்வரி காலில் விழுந்து கெஞ்சிய பாக்கியா- கோபியிடம் செருப்பால் அடித்த மாதிரி பேசிய இனியா- ராதிகா போட்ட மாஸ்டர் பிளான்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலி தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் அந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். இன்று பாக்கியாவின் கான்டீன் திறப்பு விழா என்பதால் ராதிகா கோபியிடமட வந்து சொல்கின்றார். உங்க அப்பாவும் இனியாவும் அங்க போறதுக்காக கிளம்பிட்டு இருக்கிறாங்க, அதை பற்றி தான் ஒரே பேசிட்டு இருக்கிறாங்க என்று கூற கோபி அப்பா போனால் போகட்டும் ஆனால் நான் இனியாவை விடமாட்டேன் என்று சொல்கிறார்.

அதே போல இனியா வர நீ அங்க போகக் கூடாது டாடி உன்னை வேற இடத்திற்கு கூட்டிட்டு போறேன் 10 நிமிஷம் வெயிற் பண்ணு என்று சொன்னதால ராமமூர்த்தி மட்டும் கிளம்பிச் செல்கின்றார். பின்னர் பாக்கியா வீட்டிலிருந்து எல்லோரும் திறப்பு விழாவிற்கு கிளம்ப ஈஸ்வரி மட்டும் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.


இதனால் பாக்கியா காலில் விழுந்து கெஞ்சுகின்றார். அத்தை நீங்க இல்லை என்றால் எனக்கு சந்தோஷம் இருக்காது. தப்பு பண்ணினால் திட்டுங்க பேசாமல் கூட இருங்க ஆனால் வராமல் விட்டிடாதீங்க என்று சொல்கிறார். அவரைப் போல எழிலும் கெஞ்ச ஈஸ்வரி இருவர் மீதும் கோபமாக இருப்பதோடு வரமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார்.

இதனால் பாக்கியா கலங்கிய படி கண்டீனுக்கு செல்கின்றார். தொடர்ந்து ராதிகாவிற்கு ஆபீஸிலிருந்து போன் பண்ணி நீங்க இந்த விழாவுக்கு கண்டிப்பா வரணும் என்று சொல்ல ராதிகா மறுத்து விடுகின்றார். இருந்தாலும் அவர் வற்புறுத்தி கட்டாயம் வரணும் என்று கூறுகின்றார். பின்னர் பாக்கியாவின் காண்டீனைப் பார்த்து எல்லோருமே அதிர்ச்சியடைகின்றனர். அதிலும் செழியன் இவ்வளவு பெரிய காண்டீனா அம்மா எடுத்திருக்கிறாங்க என்று ஜெனிகிட்ட சொல்ல ஜெனி அவரைக் கலாய்க்கின்றார்.


தொடர்ந்து இனியா பேசாமலே காரில் வர கோபி ராதிகா பாவம்ல நீயும் அங்க போனால் அதான் உன்னை போக விடல என்று சொல்ல இனியா அப்போ அவங்க தான் முக்கியமாக நான் முக்கியமில்லையா என கோபியைப் பார்த்து திட்டுகின்றார். இதனால் ஒரு கட்டத்தில் கோபி நான் கொண்டு போய் விடுகிறேன் வா என்று இனியாவை சமாதானப்படுத்துகின்றார். அத்துடன் இந்த எப்பிஷோட் முடிந்தது.



Advertisement

Advertisement

Advertisement