• Apr 23 2024

பாக்கியாவுக்கு இரண்டாவது கல்யாணம்? எழில் சொன்ன விஷயத்தால் விழி பிதுங்கி நிற்கும் கோபி...இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்..இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

இனியாவால் கோபிக்கும் ராதிகாவிற்கும் பிரச்சகை ஆரம்பிக்கின்றது.என் பேச்சை அவ கேட்க மாட்டேங்கிறா... இனியா என்னை மதிக்கணும் உங்க அப்பா அம்மா என்னதான் மருமகள்னு சொல்லணும் அதுக்கு நீங்க ஏதாவது பண்ணியே ஆகணும் என சொல்ல கோபி நான் என்ன பண்ண முடியும் என கேட்க நீங்க பண்ணித்தான் ஆகணும் என ஆர்டர் போடுகின்றார்.

அதற்கு கோபி நீ என்னுடைய மனைவி ஆகிட்டாய் தானே அவங்கபொறுமையாய் உன்னை ஏத்துக்கொள்ளுவாங்க..எனக் கூற விடாப்பிடியாக கோபியிடம் சண்டை போடுகின்றார் ராதிகா.

இவ்வாறுஇருக்கையில் கோபி தனது தந்தை சொன்னதை நினைத்து விழி பிதுங்கி நிற்கின்றார்.பின் மொட்டை மாடியில் உட்கார்ந்து சரக்கடித்து அங்கேயே படுத்து உறங்கி விடுகின்றார்.

 ராமமூர்த்தி திடீரென தூக்கத்திலிருந்து எழ கதவு திறந்து இருப்பதை பார்த்து கோபி எங்கே என தேடி மேலே செல்ல கோபி அங்கு குடித்துவிட்டு தூங்குவதைப் பார்த்து வருத்தப்பட்டு கீழே வந்து விடுகிறார்.

மறுநாள் காலையில் எழில் வாக்கிங் செல்ல கோபியும் வாக்கிங் வர கோபி எழிலிடம் வந்து யார் அவன்? அவன் எதுக்கு உங்க அம்மா கிட்ட நின்னு பேசிகிட்டு இருக்கான் என கோபப்படுகிறார். சூப்பர் மார்க்கெட் போறா, அவன் கூட பைக்ல போறா, வீட்டுக்கு வந்து வெளியில் நின்று பேசிக்கிட்டு இருக்கா இதெல்லாம் நீ என்னன்னு கேக்க மாட்டியா? அவளுக்கு அசிங்கமா இல்லையா என கேட்க நீங்க பண்ண துரோகத்தை விட எங்க அம்மா எங்களுக்கு எந்த துரோகமும் பண்ண மாட்டாங்க என எழில் சரியான பதிலடி கொடுக்கின்றார்.

அது மட்டுமல்லாமல் எங்க அம்மாவுக்கு அவங்க லிமிட் என்ன என்பது நல்லாவே தெரியும் அவங்க பிரண்டுனு சொல்லித்தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க, உங்கள மாதிரி எங்க கிட்ட பொய் சொல்லிட்டு தப்பான உறவு வைத்துக் கொள்ளல என பதிலடி கொடுக்கிறார். அத்தோடு  இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க ஒரு வேலை எங்க அம்மாவுக்கு யாரையாவது புடிச்சி இருந்ததுனா அவங்களுக்கு நானே கல்யாணம் பண்ணி வைப்பேன். உங்களால 25 வருஷம் வாழ்க்கையே இழந்துட்டாங்க, இனியாவது அவங்க வாழ்க்கையில சந்தோஷமா இருக்கட்டுனு நானே கல்யாணம் பண்ணி வைப்பேன் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

வாய கழுவுடா அசிங்கமா பேசாத, அசிங்கமே இல்லையா என கேட்க நீங்க பண்ணதை விட இது ஒன்றும் பெரிய அசிங்கம் இல்ல, அவங்க என்ன பண்றாங்க எங்க போறாங்கன்னு ஃபாலோ பண்ணி அதை என்கிட்ட வந்து பேசுறீங்க பாருங்க இதுதான் பெரிய அசிங்கம் என பதிலடி கொடுக்கிறார்.

இதனை அடுத்து பாக்கியா வீட்டில் அமிர்தாவின் அப்பா அம்மா ஊருக்கு கிளம்ப ஈஸ்வரி அம்மா எங்கே என கேட்க அவங்க ரூமில் இருக்காங்க கூப்பிடவா என பாக்யா சொல்கிறார். இல்ல நாங்களே பாத்து சொல்லிட்டு ஊருக்கு கிளம்பறோம் என சொல்லி எல்லோரும் ஈஸ்வரி ரூமுக்கு வர அங்கே ஈஸ்வரி நிலா பாப்பாவோட விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement