• Apr 19 2024

மீனாவிற்கும் தனுஷிற்கும் திருமணமாம்.. பரபரப்புத் தகவலை வெளியிட்ட பயில்வான்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா பிரபலங்கள் பலரை பற்றியும் அவதூறாக பேசி வருகின்ற ஒருவரே சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன். அதாவது சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து இருக்கிறார். குறிப்பாக நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.


இதனால் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்து வருவது வழமை. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான். 

இந்த நிலையில் தான் தற்போது நடிகை மீனா மற்றும் நடிகர் தனுஷ் பற்றி பயில்வான் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். அதாவது சமீபத்தில் மீனா சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகளுக்கு மேலே ஆனதால் அவரை பாராட்டும் பொருட்டு தனியார் சேனல் சார்பாக அவருக்கு பிரமாண்ட விழா ஓன்று நடத்தப்பட்டது. 


இந்த விழாவினால் மீனாவிற்கு ரூபாய் 17 லட்சம் இலாபம் கிடைத்து என்றும் ரஜினிகாந்தை மீனாவே அந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் கூறி இருக்கின்றார் பயில்வான் ரங்கநாதன். அதுமட்டுமல்லாது மேலும் மீனாவும் ரஜினிகாந்தும் 'அன்புள்ள ரஜினிகாந்த்' என்ற படத்தில் இருந்து நல்ல அப்பா மகள் உறவில் இருந்து வருகின்றனர். இதெல்லாம் தெரிந்தும் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் மீனாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஆனால் இது உறுதியான தகவல் கிடையாது என்றும் கூறி புதுக்குண்டை தூக்கி போட்டுள்ளார் பயில்வான்.


மேலும் "தனுஷுக்கு 40 வயதிற்குள் தான் இருக்கிறது, இருவருக்குமே பாடி டிமாண்ட் இருக்கும் , அதேபோல மீனா சமீபத்தில் தான் கணவரை இழந்து இருக்கிறார், தனுஷ் மனைவியை பிரிந்து இருக்கிறார். எனவே இருவரும் திருமணம் செய்து கொள்வதில் எந்த தவறுமில்லை" எனவும் கூறி உள்ளார் பயில்வான்.

தொடர்ந்து தனுஷ் குறித்து அவர் பெருக்கையில் "தனுஷ் சமீபத்தில் தான் 150 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை கட்டினார், ஆனால் அந்த வீட்டின் கிருகப்ரவேசத்திற்கு தன்னுடைய மகன்கள் வர ஐஸ்வர்யா அனுமதிக்கவில்லை" என்றும் கூறினார் பயில்வான். 


அத்தோடு "திருமணமாகி மகன்களுடன் பிரிந்து வாழ்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் குட்டை டவுசர் அணிந்து ஐஸ்வர்யா இருப்பதாகவும் பயில்வான் கடுமையாக விமர்சித்தார். மேலும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கம் கட்ட கூடாது என்று கண்டித்ததாகவும், ஆனால் தற்போது ஐஸ்வர்யா தேவாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், இதனால் மனமுடைந்த ரஜினி அந்த வேதனையை போக்குவதற்காக படங்களில் தொடர்ந்து நடித்து வருவதாகவும்" கூறி மோசமாக விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Advertisement

Advertisement

Advertisement