• Apr 25 2024

அடுத்தவங்க உழைப்பில் கிடைக்கும் புகழ் தேவை இல்லை -சமந்தா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் நடிகை சமந்தா.இவர் துணிச்சலாகவும், தைரியமாகவும் எதையும் எதிர்கொள்ளும் குணம் உடையவர். சமீபத்தில் இவருக்கு அரிய வகை நோயான ஆட்டோ இம்யூன் இருப்பதை கூட தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளிப்படையாக  தெரிவித்து இருந்தார்.

அத்தோடு  அதில் இருந்து சீக்கிரம் மீண்டு வருவதாக பதிவிட்டிருந்தார். இவ்வாறு எந்த பிரச்சினையாய் இருந்தாலும் அதை அழகாக சமந்தா எதிர்கொண்டு வருகிறார்.எனினும்  அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது.

ரசிகர்கள் மத்தியில் இந்த ட்ரெய்லருக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.மேலும்  ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நிறைய சண்டை காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இதில் நிஜ வாழ்க்கையில் நடப்பது போன்ற சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் இதில் பிரபல சண்டை பயிற்சியாளர் யானிக் பென் பணியாற்றி இருந்தார். அவர் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும்போது சமந்தாவை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். மிகத் துணிச்சல் நிறைந்த சண்டை காட்சிகளில் டூப் வைத்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு சமந்தா மறுத்து விட்டாராம்.

ஏனென்றால் மற்றவர்கள் உழைப்பில் வரும் புகழ், அந்தஸ்து தனக்கு தேவை இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம். மேலும் அந்த சண்டை காட்சிகளை மிகுந்த சிரமப்பட்டு திறம்பட சமந்தா முடித்துள்ளார். தற்போது உள்ள டாப் நடிகர்கள் படத்திலேயே டூப் போடப்படுகிறது. அதாவது ரஜினி, விஜய், அஜித், கமல் என பாரபட்சம் இல்லாமல் எல்லா நடிகர்கள் படத்திலுமே ஹீரோக்கள் கஷ்டப்படும் காட்சிகளில் டூப் போடப்படுகின்றது.

சில சமயங்களில் வயது முதிர்வு முதிர்வு காரணமாக அல்லது கால்ஷீட் பிரச்சனை, சண்டை காட்சிகள் ஆகியவற்றில் டூப் தேவைப்படுகிறது. ஆனால் தன் உடல் நிலையில் பிரச்சனை இருந்தும் அதை பொருட்படுத்தாமல் அந்த கஷ்டமான காட்சிகளிலும் அடுத்தவங்க உழைப்பில் கிடைக்கும் புகழ் தேவை இல்லை என சமந்தா நடித்து டாப் நடிகர்களை குத்தி கிழித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement