ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் காந்தாரா. கன்னட மொழில் உருவான இப்படம் கடந்த செப்டெம்பர் 30ம் திகதி வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழ் , ஹிந்தி, தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
இப்படத்திற்கு கர்நாடகாவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.அது மட்டுமல்லாமல் ஏனைய மொழிகளிலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் காந்தாரா படத்தை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் காந்தாரா திரைப்படத்தை பாராட்டியிருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் காந்தாரா படத்தை பாராட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தெரிந்ததை விட தெரியாதது அதிகம்" இதை சினிமாவை விட யாரும் சிறப்பாக சொல்லியிருக்க முடியாது.
“The unknown is more than the known” no one could have said this better in cinema than @hombalefilms #KantaraMovie you gave me goosebumps @shetty_rishab Rishab hats off to you as a writer,director and actor.Congrats to the whole cast and crew of this masterpiece in indian cinema
#கந்தாரா திரைப்படம் என்னை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகராக ரிஷப் உங்களுக்கு ஹேட்ஸ் ஆஃப். இந்திய சினிமாவில் இந்த தலைசிறந்த படைப்பின் ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!