• Apr 20 2024

“யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது” : 'பாக்கியலட்சுமி' கோபி வேதனை.!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து வரும் சதீஷ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. சின்னத்திரையில் பிரபலமான இந்த சீரியல் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பில் உள்ளது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து அனைவரிடமும் பாராட்டுக்களை அள்ளும் கோபி தனது இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. அத்தோடு ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் டிஆர்பியிலும் 'பாக்கியலட்சுமி' சீரியல் கலக்கி வருகிறது.

மேலும் இந்த சீரியலில் ஏற்கனவே கோபியை பாக்யா விவாகரத்து செய்த நிலையில் தற்போது மீண்டும் அவள் வீட்டுக்கே கோபியும், ராதிகாவும் வந்துவிட்டனர்.அத்தோடு  ராதிகா டார்ச்சர் தாங்காமல் குடிக்கு அடிமையான கோபியை மீட்பதற்காக அவனை பழையபடி வீட்டுக்கே வர சொல்கிறாள் ஈஸ்வரி. இதனை கேள்விப்பட்டு ராதிகா, இன்னொரு வாழ்க்கையை விட்டு கொடுக்க நான் தயாராய் இல்லை என சொல்லி அவளும் கோபியுடன் பாக்யா வீட்டுக்கே கிளம்பி வந்துவிடுகிறாள்.


இந்த வீட்டுக்கு வந்ததுமே பாக்யாவுடைய ரூமை பிடித்துக்கொண்டு அவளை வெளியில் தள்ளிவிடுகிறாள் ராதிகா. அத்தோடு இங்கு வந்தும் கோபி குடியை நிப்பாட்டாமல் குடித்துவிட்டு வருகிறான். அவன் வந்ததும் ராதிகா பார்த்து இன்னைக்கும் குடிச்சுட்டு வந்து இருக்கீங்களா என கேட்கிறாள். உடனே கோபி, டக்குனு இந்த பழக்கத்தை விட முடியல. கொஞ்சம் கொஞ்சமா விட்டுறேன்.

அதுமட்டும் இல்லாம குடிச்ச பின்னர் தான் நீ படுற கஷ்டம் எனக்கு தெரியுது. என்னை கல்யாணம் பண்ணிட்டு நீ ரொம்ப கஷ்டப்படுற என ராதிகாவை சமாதானம் செய்து அவள் நெற்றியில் முத்தம் கொடுக்கிறான். அந்த சமயம் பார்த்து அங்கு வரும் பாக்யா, அதை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறாள். சடாரென கதவை சாத்திவிட்டு அங்கிருந்து கிளம்பி போகிறாள்.

இவ்வாறுஇருக்கையில் இந்த காட்சியை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கோபியாக நடித்து வரும் சதீஷ், இந்த வேதனை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. எந்த ஆணுக்கும் வரக்கூடாது. கோபிக்கு மன்னிப்பே இல்லை. இருப்பினும் மன்னிக்க முயலுங்க. இந்த காட்சியில் நடிக்கும் நடிக்கும் போது நடிகர்கள் நாங்களும் மிகவும் வருத்தத்திலும் சோகத்திலும் தான் இருந்தோம். ஆனால் என்ன செய்வது. வேஷம் போட்டாச்சு. மேடை ஏறியாச்சு. காசு வாங்கியாச்சு. ஆட்டம் தொடங்கியாச்சு. நடித்து தானே ஆக வேண்டும். நெருடலான காட்சி மன்னித்துவிடுங்கள் என் ரசிகர் நண்பர்களே என பதிவிட்டுள்ளார்.இது தற்போது வைரலாகி வருகின்றது.





Advertisement

Advertisement

Advertisement