• Apr 19 2024

ஐஸ்வர்யாவை யாரும் ஏமாற்றவே முடியாது: மனைவி பற்றி தனுஷ் கூறிய விசயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்., “18 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த இவர்கள் இருவரும் விவாகரத்துப் பெறப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.

அந்த அறிவிப்பில் , “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அதன் பிறகு தனுஷ் – ஐஸ்வர்யா இருவருமே தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதோடு இருவரும் தற்போது தங்களது மகன்களுடன் தனித்தனியாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஹாலிவுட் படமான தி க்ரே மேன் அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. படத்துக்கான ப்ரோமோஷனில் பேசியிருந்த தனுஷ். தன் மகன்கள் யாத்ரா லிங்கா பற்றி சில சுவாரஸ்ய தகவலகளைப் பகிர்ந்திருந்தார்.

மேலும் அதில்,’யாத்ரா என்னை மாதிரி.அமைதியானவர். நாம ஏதும் சொன்னா அதைப் பற்றி யோசிப்பார். சாப்பாட்டில் மட்டும் அவரும் நானும் வெஜிடேரியன். ஆனால் லிங்கா அவங்க அம்மா மாதிரி, படு உஷார். ஏமாற்றவே முடியாது. கதை சொல்லித் தூங்க வைச்சிடலாம்னு நினைச்சா நீங்கதான் ஏமாந்து போவீங்க. அவங்க அம்மா எப்பவுமோ எதுலையுமே ஷார்ப். படிச்சவங்க இல்லையா!. அப்படித்தான் இருப்பாங்க.’ என்கிறார்.

தனுஷை இடைமறித்த நிகழ்வின் ஆங்கர், அப்போ ஐஸ்வர்யாவை ஏமாற்றமுடியாதுனு சொல்லறிங்க… அப்படித்தானே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.எனினும் இதற்கு “அட நல்லவிதமாத்தாங்க சொல்லறேன்” என நகைச்சுவையுடன் பதிலளிக்கிறார் தனுஷ்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement