விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. அதன் பின் இருவருமே பிரம்மாண்டமாக கேரியரில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் தமக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்திருந்தனர்.
வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றதால் இவர்களுக்கு எதிராக புகார்கள் அதிகம் எழ ஆரம்பித்தது. இதுகுறித்து விசாரணை செய்ய தமிழக அரசு அமைத்த குழு விரிவான அறிக்கை அமைத்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
கடந்த ஆகஸ்ட் 2020 இல் சினைமுட்டை மற்றும் விந்தனு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு 2021 ஆண்டு நவம்பர் மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் ஆண்டு பின் மார்ச் 2022-ல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிறந்திருக்கிறது. விசாரணையில் வாடகை தாய் பேருகாலத்தின் போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார். கரு வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டிருக்கிறது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடம் அக்டோபர் ஒன்பதாம் தேதி குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆவணங்கள் சரியாக இல்லாததால் விக்கி- நயன் சிகிச்சை பெற்ற மருத்துவமனையை விக்கி- சொல்லி அரசு வெளியிட்டிருக்கும் நோட்டீஸ் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, நயன்தாரா-விக்கி குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்த போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசியில் எண்கள் உபயோகித்ததில்லை. மேலும், விசாரணையில் மருத்துவர் வெளிநாடு சென்று விட்டதாக தெரியவந்தது.
குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை. சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை. ஐ சி எம் ஆர் வழிகாட்டுதல் முறைகளின் படி எம் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் வாடகை தாயின் உடல்நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால், இது குறித்து ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை. எனவே நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
Listen News!