பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 3 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர் அசல் கோளாரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். முதல் வாரத்தில் அமைதியாக இருந்த இவர், பின்னர் படிப்படியாக தனது சில்மிஷ வேலைகளை காட்டத்தொடங்கினார்.
முதலில் குயின்ஸியிடம் அத்துமீறி நடந்துகொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தினம் ஒரு சில்மிஷம் என சொல்லும் அளவும், தினசரி ஒவ்வொரு பெண்களிடம் தனது சில்மிஷ வேலைகளை செய்து வந்தார். இதைப்பற்றி கமலும் கடந்த வாரம் எந்தவித கேள்வியும் கேட்காமல் இருந்தார்.
இதனால் கடுப்பான ரசிகர்கள் இந்த வாரம் அசலை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்கிற முனைப்பில் அவருக்கு ஓட்டே போடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களின் ஆசைப்படி இந்த வாரம் அசல் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
அசல் வெளியெ போனதில் இருந்த நிவாஷினி அழுது கொண்டே இருந்தார்.குறிப்பாக இரவு நிவாவைக் காணவில்லை என்று தேடிய போது அவர் கிச்சினுக்கு கீழே இருந்து கொண்டு சாப்பிட முடியாமல் அழுது கொண்டே இருந்தார். இதனால் குயின்சி அவரை சமாதானப்படுத்தினார்.
அப்போது நிவாஷினி அசீம் அவ்வளவு ரெட் காட் வாங்கியும் உள்ளே இருக்கிறான். ஆனால் அசல் ன்ன பண்ணினான் என்னை விட்டிட்டு போய்ட்டான் என்று கூறினார். தொடர்ந்து இருவரும் வீட்டிலிருந்த ஒவ்வொருவர் பற்றியும் பேசிட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!