• Apr 24 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிவாஷினி அளித்த முதல் பேட்டி- அசல் கோலாறை சந்தித்தாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் சீசன் 6 சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் கடந்த வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து நிவாஷினி எலிமினேஷன் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற்றப் படுவார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அந்த வகையில் சில நாட்களுக்குப் பிறகு நிவாஷினி பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதாவது பிக்பாஸ் பயணம் எப்படி இருந்தது என்று கேட்ட போது பிக்பாஸ் நிகழ்ச்சி நல்லா இருந்தது.வீட்டுக்குள்ள இருக்கிறவங்கள ரொம்ப மிஸ் பண்ணுறேன். பிக்பாஸ் வீட்டுக்குள்ள நல்ல நண்பர்களை சேர்த்திருக்கின்றேன்.


யாரை அதிகமாக மிஸ் பண்ணுறேன் என்றால்  குயின்சியை தான் மிஸ் பண்றேன். அதே போல வீட்டுக்குள்ள பிடிச்சவங்க யாரு என்று நிறைய பேர் இருக்கிறாங்க மைனா நந்தினியோட ப்ரண்சிஃப் பிடிக்கும். அது பொல விக்ரமன் மற்றும் ஷிவினையும் ரொம்ப பிடிக்கும்.

பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஒத்துப் போகாத போட்டியாளர்கள் என்றால் அது அசீம் தான்.அது எல்லோருக்கே தெரியும். அதே போல பிக்பாஸ் வீட்டுக்குள்ள கழுகு மாதிரி இருப்பது ஷிவின் தான். இவர் தனியாகத் தான் இந்த கேமை விளையாடிட்டு வருகின்றார்.அதே போல முதலை என்றால் அது ஜனனி எனலாம்.

ஏன் என்றால் அவங்க அமைதியாக இருக்கிறாங்க ஆனால் மாஸ்க் என்று வரும் போது சூப்பராக பண்ணிட்டு இருக்கிறாங்க அதே போல முயல் மாதிரி கதிரவன் இருக்கிறார்.சூப்பராக கேஃம் விளையாடிட்டு வருகின்றார்.

மேலும் சிங்கம் என்றால் அது விக்ரமன் மற்றும் அசீமைக் கூறலாம். இரண்டு பேரும் தான் இந்த வீட்டோட டஃப் போட்டியாளர்.பிக்பாக் வீட்டுக்குள்ள நிறைய நரிக் கூட்டம் இருக்கு. அது யாரு என்று மக்களுக்கே தெரியும். அத்தோடு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி என்றும் இந்த பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிவாஷினி அசல் கோலாறை சந்தித்தாரா இல்லையா என்றும் கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த பேட்டியில் அவர் அசல் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement