• Apr 20 2024

அசல் வெளியேறியதால் கட்டிப்பிடித்து கதறி அழுத நிவாஷினி- எதிர்பார்த்த ஒரு விக்கெட் அவுட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இதிலிருந்து இரண்டு போட்டியாளர்கள் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

கருத்துகணிப்பு படி இந்த வாரம் அசல் கோலாறு தான் வெளியேறுவார் என தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அசல் வெளியேறியுள்ளார் என விவரம் அறிந்த வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.” இவனுக்கு ஒரு சீட்ட காட்டி வெளிய அனுப்புங்க கமல் சார், பிக்பாஸின் தடவியல் நிபுணர், அவரும் கோலாறாதான் இருக்காரு பேருக்கு ஏத்த மாதிரி’ என பல கமெண்ட்டுகள் சமூக வலைதளத்தில் வலம் வந்தது.


இந்த சீசனில் மக்கள் ஆவலாக காத்திருந்த ஒரு எவிக்க்ஷன் இது என்று கூட சொல்லலாம்,’ டபுல் எலிமினேஷன் வைத்து அசீம்  வெளியேறவில்லை என்றால் கூட பரவாயில்லை முதல்ல இந்த கோலாறு போகனும்பா’ என ரசிகர்கள் கூறிவந்த நிலையில், அசல் வெளியேறிய செய்தி அறிந்ததும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாட்டத் துவங்கியுள்ளனர்.


மேலும் அசல் கோலாரிடம் நெருக்கம் காட்டி வந்த நிவாஷினி அசலின் வெளியேற்றம் தாங்காமல் அவரை கட்டிபிடித்து அழுது புலம்பியதாக கிசு கிசுக்கப்படுகிறது. இருந்தாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் இனிமேல் பெண்கள் நிம்மதியாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.


Advertisement

Advertisement

Advertisement