• Apr 19 2024

நிதி அகர்வால் அடி உதை எல்லாம் வாங்கியிருக்கிறார் இனி தமிழ் படங்களில் நடிக்கமாட்டார்- உதயநிதி கூறிய திடுக்கிடும் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினட நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கலகத் தலைவன். இப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.இப்படத்தில் வில்லனாக பிக்பாஸ் ஆரவ் நடித்துள்ளார்.அத்தோடு சிறப்புத் தோற்றத்தில் கலையரசன் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, இயக்குநர்கள் மிஷ்கின், சுந்தர்.சி, ராஜேஷ்.எம், அருண்ராஜா காமராஜ், மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன், நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால், பாபிசிம்ஹா, உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் உதயநிதி ஸ்டாலின் ரொம்பவே ஜாலியாக பேசினார்.



அப்போது அவர் கூறியதாவது: இந்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள், குறிப்பிட்ட நாளுக்குள் எடுத்தார். ஆனால் 3 வருடமாக அதனை செதுக்கி வருகிறார். நவம்பர் 18ம் தேதி வெளியீடு என்று அறிவிக்காமல் இருந்திருந்தால் இன்னும் செதுக்கி கொண்டிருந்திருப்பார். செதுக்கிய வரை போதும் என்று ரிலீசுக்கு வந்து விட்டோம்.

இந்த படத்திற்காக என்னை விட அதிகமாக உழைத்தது கதை நாயகி நிதி அகர்வால்தான். என்னை விட அதிக காட்சிகளில் அவர்தான் நடித்திருக்கிறார். இனி அவர் தமிழ் படங்களில் நடிப்பாரா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு அடி உதையெல்லாம் வாங்கி நடித்திருக்கிறார். 


நான்தான் சினிமாவை தாங்கி கொண்டிருக்கிற மாதிரி எல்லோரும் நடிப்பை விட்டு விடாதீர்கள் என்று வலியுறுத்துகிறார்கள். நான் இப்போதான் நடிக்கவே ஆரம்பித்திருக்கிறேன். நான் நடித்த படங்களின் இரண்டாம் பாகத்தில் நடியுங்கள் என்கிறார்கள். ஆனால் எனக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கிறது. அதனால் மாமன்னன் படத்தை முடித்துவிட்டு செல்போன் நம்பரை மாற்றிவிட்டு எஸ்கேப் ஆகப்போகிறேன் என பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement