• Apr 23 2024

ஜெயம் ரவியின் 30வது படம் குறித்து வெளியாகிய புதிய அப்டேட்- கதாநாயகி யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜெயம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இதனைத் தொடர்ந்து சம்திங் சம்திங் எம். குமரன் தில்லாலங்கடி தனி ஒருவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் இறுதியாக பூமி என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. அடுத்து அகிலன் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.

இந்த நிலையில் இவரது 30வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தை பிரபல இயக்குநர் ராஜேஷ் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

ஸ்க்ரீன் சீன் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ ’டான்’ஆகிய படங்களிலும் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடந்திருந்தது. மேலும் இந்த படத்தில் விடிவி கணேஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அடுத்த வாரம் கேரளாவில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement