• Apr 19 2024

ரஜினிகாந்தின் படத்திற்கு வந்த புதிய சிக்கல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டங்களில் தொடங்கி இன்று வரை இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவருடைய நடிப்பு திறமைக்காக கடந்த ஆண்டு தேசிய விருதும் கிடைத்து இருந்தது. இதற்கு பலரும் பாராட்டி இருந்தார்கள்.

இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது.குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட மீனா, நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

எனினும் இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தை நெல்சன் குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான வீடியோ எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்பது போல் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து படம் பண்ணுகிறார்கள்.

அத்தோடு இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார்.மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் என பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் தலைப்பை வைத்து தற்போது மலையாளத்தில் புதிய படம் ஒன்று துவங்கியுள்ளதாம். அப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

இதனால், தமிழில் உருவாகி வரும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் மலையாளத்தில் வெளியிடும் பொழுது, அதற்கு சில தலைப்பு சிக்கல் வரலாம் என்று தெரிவிக்கின்றனர். மேலும், மலையாளத்தில் வேறொரு தலைப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகுமா என்று பலருக்கு கேட்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement