• Apr 19 2024

கணவருக்கு செய்த விடயத்தை கேலி செய்த நெட்டிசன்கள் – பிரணிதா கொடுத்த பதிலடி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகையாகத் திகழ்பவர் நடிகை பிரணிதா சுபாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர். 2010-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘போக்கிரி’ என்ற திரைப்படம் மூலம் திரை உலகில் கால் பதித்தார்.

இவரது நடிப்பில் வெளிவந்த ஏனைய படங்களாக ‘எம் பில்லோ எம் பிள்ளடோ, உதயன், பீம தீரதல்லி, சகுனி, அத்தரிண்டிகி தாரீடி’ போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இவை தவிர வேறு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சினிமாவில் தனது திறமையை வெளிப்படுத்திய இவருக்கு சில விருதுகள் கிடைத்துள்ளன. சினிமாவுடன் மட்டும் நின்று விடாது ஜோய் ஆலுக்காஸ், எஸ் பி சில்க் சேலம்,போம்பே ஜுவல்லரி, லைட் அகடமி ஆப் எடுயு கேஷன் போன்ற நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாஸடராகவும் செயற்படுகின்றார் .

அதுமட்டுமல்லாது மேலும் பல வணிக நடவடிக்கைகளிலும், அறக்கட்டளை செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ள இவர் 2021-ஆம் ஆண்டு நித்தின் ராஜு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2022 இல் பெண் குழந்தை ஒன்று பிறந்தமை நாம் யாவரும் அறிந்த விடயமாகும்.

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு பகிர்ந்திருந்தார். இது பிரணிதாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இது தவிர அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிரும் வழக்கத்தை கொண்ட இவர்,ஆடி அமாவாசை தினம் அன்று நடிகை பிரணிதா தனது கணவர் ராஜுவின் பாதங்களுக்கு பாதாபிஷேகம் செய்தது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

வெளியிட்ட சிலமணி நேரங்களில் வைரலான அந்த புகைப்படத்தை பார்த்த சில பேர் திரைப்படங்களில் கவர்ச்சியாக, மார்டனாக வலம் வரும் பிரணிதா ஆணாதிக்க கொள்கையுடன் இணைந்து வாழ தொடங்கி விட்டார் போல என கிண்டலும் கேலியிமாக பேசினார்கள்.

எனினும் அதற்கு பதிலடி தரும் வகையில் நடிகை பிரணிதா நான் திரைப்படங்களில் மார்டனாக கவர்ச்சியாக நடிக்கிறேன் என்பதற்காக சிறுவயதில் இருந்தே பார்த்து பார்த்து வளர்ந்த பாரம்பரிய சடங்குகளை கடைபிடிக்காமல் என்னால் இருக்க முடியாது. நான் நீங்கள் அனைவரும் அறிந்த மாடர்ன் பெண்ணாகவே இருந்தாலும் மனதளவில் ஒரு குடும்ப பாங்கான பாரம்பரிய வழிமுறைகளை கடைபிடிக்கும் ஒரு பெண்தான் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement