• Apr 24 2024

தன்னை நம்பர் 1 ஆகக் காட்டிக் கொள்ள விஜய் செய்த செயல்... உண்மையை அம்பலப்படுத்திய நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் மட்டுமல்லாது நடனத்தில் சிறந்து விளங்குகின்ற ஒருவராகவும், பாடகராகவும் விளங்கி வருகின்றார்.

'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் வாயிலாக சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இவர் இதுவரைக்கும் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார். 


அந்தவகையில் தற்போது இவரின் நடிப்பில் 66 ஆவது படமான 'வாரிசு' படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்களில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் இப்படமானது எதிர்வரும் ஆண்டுப் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படத்தினைத் தொடர்ந்து தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். 

மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகின்ற இவரின் நடிப்பில் உருவாகும் படங்கள் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ பெரியளவில் வசூல் வேட்டை நடத்தும். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உலகம் பூராகவும் இருக்கிறது.


இந்நிலையில் விஜய் குறித்து ஒரு செய்து ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது விஜய் தனக்கென்று ஒரு மார்க்கெட்டிங் டீம் வைத்து இணையத்தில் தன்னை ஒரு பெரிய பிம்பமாக உருவாக்கியிருந்ததாகவும், அந்த உண்மை தற்போது பிடிபட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது. 

அந்தவகையில் போன வருடம் விஜய், தோனி சந்தித்த புகைப்படத்தை நெல்சன் பகிர்ந்தார். அப்புகைப்படத்திற்கு 1லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ் வந்தது.

ஆனால், இன்று அதே ட்விட் பதிவு 99 லட்சமாக குறைந்துள்ளது. இதன் மூலம் விஜய் BOT இனைப் பயன்படுத்திதான் இந்த லைக்ஸை பெறுகிறார் என்பது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement