• Apr 20 2024

யாருடா ஸ்கூல் போற பசங்கள பிக்பாஸ் வீட்டுக்குள்ள விட்டது... ஜனனியை தாறுமாறாக வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 ஆனது ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இதில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், இந்த வாரத்தில் வேஸ்ட் ஆக இருந்தது ஜனனி தான் என்று விக்ரமன் கூறுகிறார். 


இதனைக்கேட்டதும் உடனே ஆத்திரமடைந்த ஜனனி இவருக்கு எப்போதும் என்னை குறை சொல்லுவதுதான் வேலை என்று கூறி சிறுகுழந்தை போல கதறிக் கதறி அழுகிறார். இந்த ப்ரோமோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் "யாருடா அது ஸ்கூல் போற பசங்கள பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டது" என்றும், "இந்த பொண்ணு ரொம்ப ஓவரா சீன்போடுவா" என்றும் கூறி ஜனனியை பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது ஜனனி குழந்தை போல அழுது அட்டகாசம் செய்த ப்ரோமோவைவை பார்த்த மற்றுமோர் நெட்டிசன்ஸ் "பால் பாட்டில் கொடுங்க, குடிச்சிட்டு ஓரமா தூங்கட்டும். இவ வயசு தானே தனலட்சுமிக்கும். இந்த பொண்ணை யாரும் குறை சொல்லக்கூடாது. அப்படி சொன்னா எல்லாத்தையும் தூக்கி எரிஞ்சு டிராமா பண்ணும். அப்போ என்ன டேஷ்க்கு இங்க வந்தா? இது பிபி போட்டியாளரா இல்லை அமுதவாணன் என்ன சொம்பு தூக்கியா?" எனக் கேட்டு ஜனனி, அமுதவாணன் இருவரையும் சரளமாக கூறி பங்கமாக கலாய்த்து உள்ளார்.


அத்தோடு மேலும் ஒரு பிக்பாஸ் பார்வையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இது என்ன சின்ன புள்ளத்தனமாக இருக்கு, எப்போபாரு அமுது அமுதுன்னு சொல்லிட்டு இந்த பெண்ணு இருக்கு இல்லனா. பேய் பிடிச்சா மாதிரி கத்திட்டு இருக்கு. இதுலாம் ஒரு ஃபைனலிஸ்ட் டைப்ன்னு கூவிட்டு இருக்காங்க. முதிர்ச்சி இல்லை, சுதந்திரமான எண்ணங்கள் இல்லை, விளையாட்டு இல்லை" எனக் கூறி ஜனனியை தாறுமாறாக விளாசி உள்ளார்.


இந்த விமர்சனங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement