• Apr 20 2024

மாமியார் வீட்டுக்கு ஹனிமூன் கொண்டாட வந்த என்ற நினைப்பா... அசல் கோளாரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பமான நிலையில் தற்போது 3ஆவது வாரத்தை வெற்றிகரமாக கடக்கவிருக்கின்றது. இதில் கலந்து கொண்ட போட்டியாளராகள் அனைவருமே ஒவ்வொரு விதமாக காணப்படுகின்றனர். அதிலும் அசல் கோளாரின் அலப்பறைகளோ தாங்க முடியாத அளவிற்கு இருக்கின்றன. 


இவருக்கு இணையவாசிகள் பலரும் தடவல் மன்னன், சில்மிஷ சிகாமணி என தினம் தினம் ஒரு பெயரை வைத்து அழைத்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஏதோ ஜாலியான பேசுகிறார் என நினைத்தால், வயது வித்தியாசம் பார்க்காமல், மகேஸ்வரி, ரச்சிதா என அனைவரையும் தப்பான எண்ணத்தில் ஒரு தடவுதடவி விட்டார். 


இவர்கள் அனைவரையும் விட குறிப்பாக நிவாஷினியிடம் ஒருபடி மேல சென்று கடிப்பது, கட்டிப்பிடிப்பது என எல்லை மீறி வருகிறார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே, ரசிகர்கள் பலரும் இதை கண்டித்து வருகின்றனர். 

கடந்த வாரம் கூட அசல் கோளாரிடம் கமல் சார் இதுகுறித்து கேட்பார் என்று பார்த்தால், எதுவுமே சொல்லாமல் நிகழ்ச்சியை முடித்துவிட்டார். இதனால், ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபமும் தொகுப்பாளர் கமல் மீது திரும்பி உள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சியை எடிட் செய்து பல விஷயங்களை மறைத்து 1மணி நேரமாக ஒளிபரப்பினாலும், 24 மணி நேர நேரலையில் பல விஷயங்கள் கொத்தாக மாட்டிக்கொள்கிறது.  அசல் கோளாரின் இந்த அநாகரிக செயற்பாடுகளுக்கு நிவாஷினி எதுவுமே சொல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு இன்னும் கடுப்பாக இருக்கிறது.

இதே சில்மிஷத்தை குயின்ஷியிடமும் காட்டி இருக்கின்றார். ஆனால் கடுப்பான குயின்ஷி அசலை பார்த்து முறைத்தால், அங்கிருந்து அமைதியாக சென்றுவிட்டார் அசல். ஆனால், நிவாஷினி அசல் எது செய்தாலும், பல்லை காட்டிக்கொண்டே அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையிலேயே இருக்கிறார்.


பெண்களை தொடுவதையும், சில்மிஷம் செய்வதையும் பார்த்த ரசிகர்கள் பலர் "அசல் கேம் விளையாட பிக்பாஸ் வீட்டிற்கு வந்த மாதிரி தெரியவில்லை. ஏதோ ஹனிமூனுக்கு வந்த மாதிரி நடந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியை குழந்தைகளும் பார்க்கிறார். தயவு செய்து அசலை கண்டித்து வெளியில் அனுப்ப வேண்டும்" என மறுபடியும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement