• Apr 25 2024

வாடகைத்தாய் பிரச்சினை ஓய்ந்த நிலையில்... மீண்டும் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நயன்தாரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்தளவிற்கு இவரின் நடிப்பிலும், அழகிலும் மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம்.

நயன்தாராவிற்கு இந்த ஆண்டு மிகவும் ஸ்பெஷலான ஒரு ஆண்டு. இதற்கான முக்கிய காரணம் என்னவெனில் இந்த வருடம் தான் அவர் தனது நீண்ட நாள் காதலனனான விக்னேஷ் சிவனை பிரமாண்டமாகத் திருமணம் செய்துகொண்டார். 


அதுமட்டுமல்லாது திருமணமான நான்கே மாதங்களில் அவர்களுக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது. அதுவும் இரட்டை குழந்தைகள் என்பதால் விக்கி - நயன்தம்பதியினர் டபுள் சந்தோஷத்தில் உள்ளனர். இருப்பினும் திருமணமான நான்கே மாதத்தில் இவர்களுக்கு வாடகைத் தாய் முறையில் குழந்தை பிறந்தது பலரிடையேயும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து இவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் தான் விக்கி - நயன் தம்பதிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டே திருமணம் ஆனதும், இவர்கள் கடந்த ஆண்டே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததும் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு குழந்தை பிறந்த தகவலை வெளியிட்ட பின்னர் அது சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக மாறியமையால் நயன்தாரா நடிக்கும் படங்கள் குறித்து எந்தவித அப்டேட்டும் இதுவரை வெளியாகாமல் இருந்து வந்தது. 


இந்நிலையில் சுமார் ஒரு மாத கால இடைவெளிக்கு பின்னர், நயன்தாரா தன்னுடைய ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றினைக் கூறியுள்ளார்.அதாவது அவர் நடித்துள்ள 'கோல்டு' என்ற படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தான் இந்தப்படத்தையும் பிரமாண்டமாக இயக்கி உள்ளார். இப்படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். 


கடந்த செப்டம்பர் மாதமே வெளியாக இருந்த இப்படமானது சூட்டிங் பணிகள் முடிவடையாமல் இருந்ததால் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் யாவும் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படமானது வருகிற டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் நயன்தாரா ரசிகர்கள் செம குஷியில் உள்ளார்களாம்.

Advertisement

Advertisement

Advertisement