• Apr 24 2024

குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நயன்தாரா... விக்னேஷ் சிவன் பகிர்ந்த வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.மேலும் அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. மேலும் இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.அத்தோடு இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.


சில மாதங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

எனினும் சமீபத்தில் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு மகர ஜோதி தரிசனம் செய்ய சபரிமலைக்கு விக்னேஷ் சிவன் சென்றிருந்தார்.மேலும்  இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

இவ்வாறுஇருக்கைில் விக்னேஷ் சிவன், பொங்கல் பண்டிகையை தனது வீட்டில் சிவபெருமான், பார்வதி, முருகன், விநாயகர் இருக்கிற சாமி படத்தை வைத்து பூஜை செய்து அதனருகில் மனைவி நயன்தாரா, குழந்தைகள் உயிர் & உலகத்துடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பொங்கலோ பொங்கல் என தலைப்பிட்டு, மகாநதி படத்தில் வரும் பொங்கல் பாடலையும் விக்னேஷ் சிவன் இணைத்துள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement