• Apr 20 2024

மனைவிக்காக பெற்றதாயை கண்டுகொள்ளாமல் வாழும் நாசர்- உண்மையை உடைத்த அவரது தம்பி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருபவர் தான் நாசர். இவர் திருமணம் முடித்து 25 வருடங்களுக்கு மேலாக இருப்பினும் தனது பெற்றோரைப் பார்க்காமல் கைவிட்டு விட்டார் என அவரின் சகோதரர் தற்பொழுது கூறியிருக்கின்றார்.


அதாவது நாசர் தன்னுடைய மனைவி கமீலாவின் சொல்லைக் கேட்டு அவரது தாய் மற்றும் தந்தையை கைவிட்டு விட்டதாகவும் அவர்களை சந்திக்காமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நடிகர் நாசரின் தம்பி அயூப் தன்னுடைய அம்மாவை நேரில் அழைத்து வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார், 


அதில் நடிகர் நாசர் அவருடைய அம்மா அப்பாவையும் கண்டு கொள்வதே இல்லை, மேலும் நேரில் வந்து  கொஞ்சம் ஆறுதலாக  பேசுவது கூட கிடையாது, ஆனால் ஒரு நடிகராக இருந்து கொண்டு பெற்றோரை இப்படி செய்வது நல்லது இல்லை நாளைக்கு நாசரில் மகன் இப்படி செய்தால் அவருக்கு எப்படி இருக்கும் ஒரு முறையாவது நேரில் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.


மேலும் திருமணம் ஆன பின்னர் தான் நாசர் சொந்தமாக வீடு சொத்து எல்லாம் சே ர்த்துள்ளராம், ஆனால இப்போது சொந்த அம்மாவுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க பணம் இல்லையாம், ஆனால் எப்படி தான் இந்த நடிகர் நாசர் தன் அம்மாவையே இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்துள்ளார் என்று தான் தெரியவில்லை, முக்கியமாக நாசரின் அம்மா இல்லாமல் நாசர் எப்படி இவ்ளோ பெரிய நிலைக்கு சென்று இருப்பார் என்று தான் தெரியவில்லை, ஆனால் நாசர் மகன் இப்படி செய்தால் தான் தெரியும் என மனம் உருக பேட்டி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement