• Apr 19 2024

“நாராயணா.. நாராயணா” .. மணியை கலாய்ச்ச கமல் ..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே நடந்து முடிந்துள்ளது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அத்தோடு இப் பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

மேலும் இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.


இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். எனினும் இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா, ADK, கதிரவன், அமுதவாணன், மைனா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் ஃபினாலேவில் விக்ரமன் & அசிம் இருவரில் அசிமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, கையை மாற்றி மாற்றி ஆட்டி விளையாட்டு காட்டிய கமல் இறுதியாக அசிம் வெற்றி பெறுவதாக அறிவித்தார்.

அத்தோடு வெற்றி பெற்ற அசிம் கோப்பையை உயர்த்திக்காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன், அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுக்கான காசோலையும், இந்தியாவில் அறிமுகமாகும் மாருதி சுசுகி காரின் பிரஸ்ஸா எனும் மாடலின் முதல் காரும் பரிசாக வழங்கப்பட்டது. அத்தோடு முன்னதாக கிராண்ட் ஃபினாலேவில் பேசிய கமல்ஹாசன், “முந்தைய சீசன் போல், இந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளர்கள் வெளியே சென்று விட்டு திரும்பவும் வீட்டுக்குள் போகும்போது நேர்மறையான கருத்துக்களை கூறுவார்கள் என எதிர்பார்த்தால், இந்த சீசனில் எலிமினேட் ஆகி போட்டியாளர்கள்  வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் செல்லும்போது சண்டைதான் உருவானது” என்று தன் பார்வையை முன்வைத்து விட்டு இது சரியா என்று மகேஸ்வரியை கேட்டார்.


அதற்கு மகேஸ்வரி சிரித்தபடி எழுந்து, “சார் சண்டை போட வேண்டும் என்று பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை, அந்த வீட்டுக்குள் சென்றாலே சண்டை வந்துவிடுகிறது” என்று கலகலப்பாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, “என்ன மணிகண்டன்? நீங்கள் சொல்லுங்கள்” என்று கமல்ஹாசன் மணிகண்டனை கேட்க, அவரும் சிரித்துக் கொண்டே பதில் சொல்ல வர, அதற்கு கமல், “இல்லை.. அதற்குள் நாம் ஆழமாக போக வேண்டாம்.. நான் என் வேலையை செய்தேன்.. நாராயணா.. நாராயணா..” என்று விளையாட்டாக கூறினார்.


பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு நேர்மையான அதேசமயம், வல்லவருக்கான போட்டி. மேலும் இதில் முதன்மையாக இருக்க வேண்டியது எண்டர்டெயின்மென்ட் என்று பல ரசிகர்களும் இந்த ஃபினாலே நிகழ்ச்சி அரங்கத்தில் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி முழுவதும் கமல்ஹாசன் மற்றும் போட்டியாளர்கள் அனைவருமே சிறப்பாகவே என்டர்டெயின் செய்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement