• Apr 23 2024

பிரமாண்டமாக நடைபெற்ற நக்ஷத்ராவின் வளைகாப்பு- வைரலாகும் வீடியோ- யாரெல்லாம் போயிருக்கிறாங்க தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியல் மூலம் பிரபலமான நக்ஷத்ரா. தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'கிடாரி பூசாரி மகுடி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே கிராமத்து வேடத்தை ஏற்று நடித்த நக்ஷத்ரா, அந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்திருந்தாலும்... தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலின் பக்கம் திரும்பினார்.


திரைப்படங்களில் இவருக்கு கிடைக்காத வரவேற்பை, குறுகிய காலத்தில் சீரியல் பெற்றுத் தந்தது. மேலும் இவருக்கு என தனி ரசிகர் கூட்டமும் உருவானது. இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விஷ்வா என்பவரை நக்ஷத்ரா மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.


 இதனை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்த இவர், திடீர் என ஏன், திருமணம் செய்து கொண்டேன் என்பதையும் பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.அதாவது தன்னுடைய இந்த அவசர திருமணத்திற்கு காரணம் தன்னுடைய தாத்தா தான் என்றும், அவருக்கு மிகவும் உடல் நிலை சரியில்லை. அவர் தன்னுடைய திருமணத்தை பார்க்க ஆசைப்பட்டதால் மிகவும் அவசர அவசரமாக இந்த திருமணம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார், 


மேலும் திருமணம் ஆன ஒரே வாரத்தில், தன்னுடைய தாத்தா இறந்த தகவலையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். திருமணம் ஆன பின்னரும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'வள்ளி திருமணம்' என்கிற சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து வந்தார்.


 இதை தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி டான்ஸ் ஷோ ஒன்றில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டு வருகின்றார்.இந்நிலையில்  இவருக்கு வளைகாப்பு பங்சன் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.





Advertisement

Advertisement

Advertisement