• Apr 24 2024

நட்சத்திராவுக்கு தெரிய வந்த சிவாவின் சூழ்ச்சி...விறுவிறுப்பின் உச்சத்தில் கார்த்திகை தீபம் சீரியல்..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்  தான் மீனாட்சி பொண்ணுங்க.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நட்சத்திரா பத்திரிகை பார்த்து பீல் பண்ண அபிராமி நாளைக்கு உங்க வீட்ல அப்பா அம்மாவை பக்கத்துல இருக்குற சிவன் கோவிலுக்கு வர சொல்லு அங்க வெச்சி முதல் பத்திரிக்கை பூஜை பண்ணி உங்க அப்பா அம்மா கையில கொடுக்கணும் என்று அபிராமி கூற  நட்சத்திரா சரி என்று கூறுவதோடு  கார்த்திகை பார்க்க போவதாக சொல்ல அபிராமி அனுப்பி வைக்கிறாள்.

இதனையடுத்து தீபா வீட்டில் ராஜு பத்திரிக்கை கொண்டு வந்து கொடுக்க தீபாவின் அப்பா அம்மா பத்திரிக்கை பார்த்து பீல் பண்ண அதை நட்சத்திராவின் காதலன் மறைந்து இருந்து பார்க்கிறான். அடுத்து பத்திரிகை பூஜை ரூமில் வைத்து பூஜை செய்து தீபாவின் அம்மா போக மைதிலி அந்த பத்திரிகையை எடுத்து பார்த்துவிட்டு ஜன்னல் ஓரத்தில் வீச அதை தீபாவின் காதலன் எடுத்து கொண்டு போகிறான்

இதன் பின்னர் நட்சத்திரா கார்த்திகை சந்தித்து கோயில் பிரசாதத்தை கொடுத்து விட்டு வீட்டுக்கு போக நட்சத்திரா தனக்கும் கார்த்திக்கும் நடக்கும் கல்யாண பத்திரிகை வைத்துக் கொண்டிருக்க நட்சத்திராவின் காதலன் தீபாவின் கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்து கொடுத்து நீ சந்தேகப்பட்டது நிஜம்தான் அந்த சிவாவுடைய அசிஸ்டன்ட் ராஜு தான் கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு இருக்கிறான் இதற்கு சிவாவும் காரணம் என பத்திரிகையை காட்டுகிறான்.

அத்தோடு பத்திரிகை வாங்கி நட்சத்திரா பார்க்க இரண்டு பத்திரிகையும் ஒரே நேரத்தில் ஒரே நாளில் திருமணம் நடப்பதாக காட்ட நட்சத்திரா நான் நினைச்சது சரிதான் கண்டிப்பா அந்த சிவா தீபாவ தான் இங்கு மருமகளாக கொண்டு வர போறான் என்று கூற  நட்சத்திரா காதலன் சரி எதுக்காக பண்றான் என்று கேட்க இருவரும் சிவா வீட்டுக்கு வருகின்றனர்.

நட்சத்திரா மறைந்து இருந்து சிவா வீட்டை கவனிக்க சிவா ராஜுவிடம் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும் நான் ஆசைப்பட்ட மாதிரி தீபா அந்த வீட்டுக்கு மருமகளா போகணும், ஒரு கருப்பு பெண் தனக்கு மருமகளா வந்ததா நினைச்சு அபிராமி வருத்தப்படணும் என்று பேசிக் கொண்டிருக்க அதை நட்சத்திரா கேட்டு விடுகிறாள்.

அத்தோடு தன் காதலனிடம் நான் நினைச்சது சரிதான் என்று சொல்லி உடனே இதை நம்ம விட்ற கூடாது நான் தான் மணமேடையில் உட்காரணும் அபிராமி கடைசி வரைக்கும் அந்த தீபாவ வெறுக்கணும் என்று அபிராமிக்கு போன் செய்து நாளை சிவன் கோயில் வேண்டாம் பொன்னியம்மன் கோவிலில் பத்திரிகை மாற்றலாம் என்று வர சொல்ல மறுநாள் காலை இரண்டு குடும்பமும் பொன்னியம்மன் கோவிலுக்கு பத்திரிக்கை வைக்க வர தீபா குடும்பம் முதலில் வந்து சாமியிடம் கொடுத்து பூஜை செய்ய சொல்ல சாமியாரும் பத்திரிகையை வைத்து பூஜை செய்ய அபிராமி குடும்பமும் வருகின்றது.

அப்போது தர்மகர்த்தா ஏற்கனவே வெளியூரில் இருந்து வந்த ஒரு குடும்பம் பத்திரிகை வைத்து பூஜை செய்வதால் கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்ல நட்சத்திரா கோவப்பட்டு எங்க அத்தை இந்த கோயிலுக்கு எவ்வளவு உதவி பண்ணிருக்காங்க எங்க அத்தையை காக்க வச்சிட்டு நீங்க வேறொரு குடும்பத்திற்கு பத்திரிக்கை பூஜை பண்ணா சரியா இருக்குமா என்று கூற  அபிராமி கொஞ்சம் அமைதியா இருக்க சொல்ல ஐஸ்வர்யா அந்த குடும்பம் யார் என்று சொல்லி போய் பார்க்க அங்கு தீபா குடும்பம் இருக்க தீபா குடும்பத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

இதனையடுத்து ஐயர் பூஜை செய்த பத்திரிகை தட்டில் வைத்துக் கொடுக்க அதை தட்டி விடுகிறாள். தட்டி விட்டு தர்மலிங்கத்தை கோபமாக பேச தர்மலிங்கம் பதிலுக்கு பேச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட இறுதியில் தர்மலிங்கத்தை ஐஸ்வர்யா அடிக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். மேலும் இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Advertisement

Advertisement

Advertisement