• Apr 25 2024

திடீரென சமந்தாவை சந்தித்த நாகார்ஜுனா-இது தான் காரணமாம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா .இவர் பிரபல தெலுங்கு நடிகரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் .மேலும் திருமணம் ஆகி 4 வருடங்களில் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

இதன் பின் பல வதந்திகளுக்கு பிறகு இருவரும் தத்தமது வேலைகளில் பிஸியாக உள்ளனர்.இவ்வாறுஇருக்கையில் தனக்கு தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

மேலும்  அவர் சீக்கிரம் குணமடைய வேண்டமென பல நடிகர்கள், நடிகைகள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர் சமந்தா. அவரது உடல் நிலை குறித்து பதிவிட்டதும், நாகார்ஜுனாவின் மற்றொரு மகனான அகில், சமந்தா நலம் பெற வாழ்த்து தெரிவித்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். 


அதே சமயம் முன்னாள் கணவரான நாக சைதன்யா, மாமனார் நாகார்ஜுனா எந்த விதமான பதிவும்  போடவில்லை. இவ்வாறுஇருக்கையில் நாகார்ஜுனா சமந்தாவை நேரில் சென்று சந்திக்க உள்ளதாக ஒரு தகவல் டோலிவுட்டில் வெளியாகி உள்ளது.


 அவருடன் நாக சைதன்யாவும் செல்வாரா அல்லது இந்தத் தகவல் வெறும் வதந்தியா என்பது விரைவில் தெரிந்துவிடும். அத்தோடு முன்னாள் மருமகள் என்று பார்க்காமல் சக நடிகையாக சமந்தாவின் உடல்நலம் குறித்து விசாரித்து நாகார்ஜுனா, நாக சைதன்யா பதிவிட்டிருக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்து பரவி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement