• Apr 20 2024

"என் இதயம் இனி எனக்குள் இல்லை''....தனது மகனின் பிறந்தநாளில் நடிகை ரீமாசென் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகை ரீமாசென் 2001 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ’மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை ரீமாசென். முன்னதாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ரீமா சென், இந்தி, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

தளபதி விஜயுடன் பகவதி, சீயான் விக்ரம் உடன் தூள், சிம்புவுடன் வல்லவன்,  செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், கிரி, செல்லமே, திமிரு உள்ளிட்ட படங்களில் ரீமா சென் நடித்துள்ளார். இந்தியில் கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்தில் கடைசியாக ரீமாசென் நடித்திருந்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரண் சிங் என்பவரை நடிகை ரீமாசென்  திருமணம் செய்து கொண்டார்.  2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று ரீமா சென்னுக்கு ருத்ரவீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

இன்று தமது மகனின் 10-வது பிறந்தநாளை முன்னிட்டு ரீமா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை காணாத போட்டோக்களை வெளியிட்டு மகனுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

குழந்தை பருவம் முதல் தற்போது வரை இருக்கும் புகைப்படங்களை ரீமா சென் பகிர்ந்துள்ளார். "என் இதயம்  இனி எனக்குள் இல்லை .. நீ செல்லும் எல்லா இடங்களிலும் அதை சுமந்து செல்" என தன்னுடைய வாழ்த்தில் ரீமா சென் குறிப்பிட்டுள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement