• Sep 25 2023

ரோகினியின் மகனை வீட்டுக்கு கொண்டு வந்த முத்து- வெளியே கொண்டு போய் போடச் சொன்ன விஜயா- கதறி அழும் ரோகினி-Siragadikka Aasai Promo

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. புதிதாக ஆரம்பித்தாலும் இந்த சீரியல் ரிஆர்பியிலும் முன்னணியில் நிற்கின்றது. இதில் மீனா தன்னுடைய வீட்டுக்கு போனதால் முத்து சாப்பிடுவதற்காக அங்கே போய் மீன் குழம்பு பிடித்து விட்டதால் சாப்பிட்டு அங்கேயே தங்கி விடுகின்றார்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதாவது மீனாவும் முத்துவும் காரில் வரும் போது ரோகினியின் அம்மாவை வீதியில் மயங்கி விழுந்து விடுகின்றார்.இதனால் முத்துவும் மீனாவும் பதறிப் போய் அவரை ஹாஸ்பிட்டலில் கொண்டு போய் சேர்த்து விட்டனர்.


இதனால் முத்து ரோகினியின் குழந்தையை தன்னுடைய வீட்டுக்கு கொண்டு வர விஜயா, யாரு இது என்று கேட்க மீனா இவங்க பாட்டி மயங்கி விழுந்திட்டா என்று சொல்ல விஜயா இதைக் கொண்டு போய் வெளில விடு என்று சொல்கின்றார். இதை மறைந்து நின்று கேட்ட ரோகினி கதறி அழுகின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement