• Apr 19 2024

ஜுவாவைத் தனியாக வேலை பார்க்க வைத்த மூர்த்தி- கண்ணனை மோசமாக திட்டிய மீனா- பிளவு படும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

இன்று வீட்டுக்கு தனத்தின் அம்மாவும் ஐஸ்வர்யாவின் சித்தியும் வந்திருந்தார்கள். அப்போது மீனா மட்டன் கறி செய்து விட்டேன் என்று கூற எல்லோரும் மீனாவைப் பாராட்டுகின்றனர். தொடர்ந்து மீனாவுடன் எல்லோரும் கலகலப்பாக பேசுகின்றனர். அதன் பின்னர் கடையில் ஜுவா தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்கின்றார்.

கூட்டமும் அதிகமாக வருவதால் மூர்த்தி ஜுவாவை இந்த வேலையுடன் டெலிவரி வேலையையும் பார்க்க சொல்கின்றார். இதனால் வேலை செய்து களைப்படைந்த ஜுவா மூர்த்தியிடம் கதிரையும் கொஞ்சம் கூப்பிடுவமா என்று கேட்க மூர்த்தி வேணாம் என்று கூறியதால் ஜுவா தனியாகவே வேலை செய்கின்றார்.


பின்னர் 4 மணிக்கு மேலே ஆகியும் ஜுவா இன்னும் சாப்பிட வரவில்லையே என்று மீனா வாசலில் நின்றே காத்துக் கொண்டிருக்கின்றார். அப்போது அங்கு வரும் தனம் என்ன என்று விசாரிக்க அந்த நேரம் ஜுவாவும் வந்து கடைல நிறைய வேலை மீனா அது தான் மதியம் சாப்பிட வரல என்று கூறுகின்றார். தொடர்ந்து வேலை சீக்கிரம் முடிந்து விட்டது என கண்ணனும் வீட்டுக்கு வந்து விட ஜுவா கண்ணனை தன்னோட கடைக்கு வர சொல்லி அழைக்கிறார்.

ஆனால் கண்ணன் மறுத்து விட ஜுவா தனியாக செல்ல மீனா கண்ணனை திட்டி விட்டு உள்ளே செல்கிறாள். தொடர்ந்து மீனா கசாயம் செய்து வந்து கொடுக்க தனம் முல்லை ஐஸ்வர்யா மூவருமே குடிக்க முடியாமல் தவிக்கின்றனர்.இருந்தாலும் மீனா கட்டாயப்படுத்தி குடிக்க விட்டு தண்ணீர் எடுக்க சென்ற போது மீனாவின் அம்மா வீட்டுக்கு வருகின்றார்.


அப்போது தண்ணீர் குடத்துடன் வந்த மீனா ஓ நீயா எதுக்கு வந்த என்று கேட்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement